தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

சுஷில் சந்திரா: 'ஒரே நாடு ஒரே தேர்தல்' நல்ல யோசனை

1 mins read
0431cac4-bc2c-44b0-800d-9d5f7eafc469
-

புது­டெல்லி: 'ஒரே நாடு ஒரே தேர்­தல்' என்­பது நல்­ல­தொரு யோசனை என தலை­மைத் தேர்­தல் ஆணை­யர் சுஷில் சந்­திரா தெரி­வித்­துள்­ளார்.

எனி­னும், நாட்­டின் அர­சி­ய­ல­மைப்­புச் சட்­டத்­தில் மாற்­றம் கொண்டு வரப்­பட்­டால் மட்­டுமே இந்த யோசனை சாத்­தி­ய­மா­கும் என்று அவர் குறிப்­பிட்­டுள்­ளார்.

"தேர்­தல் ஆணை­யம் அனைத்­துத் தேர்­தல்­க­ளை­யும் ஒரே நேரத்­தில் நடத்­து­வ­தற்­குத் தயா­ராக உள்­ளது. ஐந்து ஆண்­டு­க­ளுக்கு ஒரு­முறை மத்­திய, மாநி­லத் தேர்­தல்­களை ஒரே சம­யத்­தில் நடத்த நாங்­கள் தயா­ராக உள்­ளோம்.

"அண்­மை­யில் நடை­பெற்ற ஐந்து மாநி­லத் தேர்­தல்­கள் தொடர்­பாக 2,270 வழக்­கு­கள் பதி­வாகி உள்­ளன. தேர்­தல் ஆணை­யத்­திற்கு அனைத்து அர­சி­யல் கட்­சி­களும் ஒன்­று­தான்.

"'உங்­கள் வேட்­பா­ளரை அறிந்து கொள்­ளுங்­கள்' என்ற பெய­ரில் அறி­மு­கப்­ப­டுத்தி உள்ள செயலி தேர்­தல் ஆணை­யத்­தின் வெற்­றி­க­ர­மான முயற்சி.

"குற்­றப்­பின்­னணி கொண்ட வேட்­பா­ளர்­கள் குறித்து வாக்­கா­ளர்­க­ளுக்­குத் தெரிந்­தி­ருக்க வேண்­டும் என்று உச்ச நீதி­மன்­றம் தீர்ப்­ப­ளித்­தது. என­வே­தான் நாங்­கள் இந்த செய­லியை உரு­வாக்­கி­னோம்.

"இம்­முறை ஐந்து மாநி­லங்­களில் போட்­டி­யிட்ட 6,900 வேட்­பா­ளர்­களில் 1,600க்கும் மேற்­பட்­ட­வர்­கள் குற்­றப்­பின்­னணி கொண்­ட­வர்­கள்," என்று தலை­மைத் தேர்­தல் ஆணை­யர் சுஷில் சந்­திரா செய்தியாளர்களிடம் பேசுகையில் தெரி­வித்தார்.