கவலையில் காங்கிரஸ்: இரு மாநிலங்களை நம்பும் நிலை

கவலையில் காங்கிரஸ்: இரு மாநிலங்களை நம்பும் நிலை

2 mins read
095b7ca4-acdc-4a0b-8265-635d16115892
-

குஜராத், இமாச்சலப் பிரதேச தேர்தல் கைகொடுக்கும், வெற்றிபெறலாம் என கணிப்பு

புது­டெல்லி: இந்­தி­யா­வில் அண்­மை­யில் நடந்து முடிந்த ஐந்து மாநில சட்­ட­மன்­றத் தேர்­தலை அடுத்து மிக முக்­கிய தேசிய கட்­சி­யான காங்­கி­ரஸ் நிலைமை மிக­வும் பரி­தா­ப­மாக போய்­விட்­டது.

ஒரு காலத்­தில் கிட்­டத்­தட்ட இந்­தியா முழு­வ­தும் கோலோச்­சிய அந்­தக் கட்சி, இப்­போது மூன்று மாநில அர­சாங்­க­ளுக்குத் தோள் கொடுக்­கும் வட்­டார கட்­சி­யாக ஆகி­விட்­டது.

அதோடு, இரண்டே இரண்டு மாநி­லங்­களில் மட்­டும் காங்­கி­ரஸ் கட்சி அர­சி­யல் பலத்­து­டன் விளங்கு­கிறது.

ஜார்­கண்­டில் ஜேஎம்­எம் அர­சாங்­கத்­திற்கு காங்­கி­ரஸ் ஆத­ரவு தரு­கிறது. மகா­ராஷ்­டி­ரா­வில் உத்­தவ் தாக்கரே கட்­சிக்கு அது ஆத­ரவு கொடுக்­கிறது. தமிழ்­நாட்­டில் திமுக வின் அர­சி­யல் கூட்­டணிக் கட்­சி­யாக காங்­கி­ரஸ் இருக்­கிறது.

சத்­தீஸ்­கர், ராஜஸ்­தா­னில் மட்டும்­ சொந்த அர­சாங்­கங்­களுடன் காங்­கி­ரஸ் கட்சி கொடி பறக்­கிறது.

அண்­மை­யில் நடந்து முடிந்த சட்­ட­மன்­றத் தேர்­த­லில் உத்­தர காண்ட், கோவா ஆகிய இரு மாநில ஆட்­சி­களை­யும் பாஜ­க­வி­டமிருந்து பறித்­து­வி­ட­லாம்; பஞ்­சாப்பை தக்­க­வைத்­துக்கொள்­ள­லாம் என்று காங்கிரஸ் கட்சி கனவு கண்­டது.

ஆனால் படு­மோ­ச­மான தோல்­வி­யைத்­தான் காங்­கி­ரஸ் காண முடிந்­தது. மக்­க­ள­வை­யில் வெறும் 53 உறுப்­பி­னர்­க­ளு­டன் காங்­கி­ரஸ் காலம் தள்­ளு­கிறது. மேல­வை­யில் அதன் பலம் குறைந்து வரு­கிறது.

இந்­நி­லை­யில், இந்த ஆண்டு முடி­வில் குஜ­ராத், இமாச்­ச­லப் பிர­தேச மாநி­லங்­களில் நடக்­க­விருக்கும் தேர்­தல் தனக்குச் சாத­க­மாக இருக்­கும் என்று காங்­கி­ரஸ் நம்­பு­கிறது, கணிக்கிறது.

இந்­திய அர­சி­ய­லில் இது­வரை இல்­லாத அள­வுக்கு காங்­கி­ரஸ் கட்சி 2014 முதல் படு­வீழ்ச்­சியை கண்டு இருப்­ப­தாக கவ­னிப்­பா­ளர்­கள் கூறு­கி­றார்­கள்.

இதே நிலைமை நீடித்­தால் 2024ல் நடக்­க­வி­ருக்­கும் நாடா­ளு­மன்­றத் தேர்­த­லில் காங்­கி­ரஸ் காணா­மல் போய்­வி­டும் என்று அஞ்­சப்­ப­டு­கிறது.

இந்­நி­லை­யில், பஞ்­சாப்­பில் அமோக வெற்றி பெற்று இருக்­கும் ஆம் அத்மி கட்சி தேசிய அள­வில் காங்­கி­ர­சுக்கு மாற்று எதிர்க்­கட்­சி­யாக உரு­வெ­டுக்­கக்­கூ­டும் என்று அர­சி­யல் பேச்சு அடி­ப­டு­வ­தால் காங்­கி­ரஸ் பிர­மு­கர்­கள் மேலும் கவ­லை­யில் ஆழ்ந்­து­விட்­ட­னர்.

இத­னி­டையே, அண்­மைய அரசியல் தோல்­வி­கள் பற்றி விவா­திக்கவும் இன்று தொடங்­கும் நாடாளு­மன்றக் கூட்­டத்­தில் விவா திக்க வேண்­டியவை குறித்து பேசவும் காங்­கி­ரஸ் நாடாளு­மன்ற குழுக் கூட்­டம் நேற்று நடந்­தது.

சோனியா, ராகுல் ராஜினாமா செய்ய மறுத்ததாகவும் உள்கட்சி தேர்தலை முன்கூட்டியே நடத்தும் திட்டம் பற்றி விவாதிக்கப்பட்டதாகவும் தெரியவந்தது. செயற்குழுக் கூட்­டமும் நேற்று நடக்­க­வி­ருந்தது.