மாண்ட தாயின் உடலோடு நான்கு நாள்கள் தூங்கி எழுந்து சாப்பாடு ஊட்ட முயன்ற மகன்

மாண்ட தாயின் உடலோடு நான்கு நாள்கள் தூங்கி எழுந்து சாப்பாடு ஊட்ட முயன்ற மகன்

1 mins read
98148445-6496-4853-8333-25b093d5013b
-

திரு­மலை: இந்­தி­யா­வில் ஆந்­தி­ரப் பிர­தே­சத்­தில் நிகழ்ந்த ஒரு சம்­ப­வம் பற்றி இப்­போது பர­ப­ரப்­பாக பேசப்­படு­கிறது. அந்த மாநி­லத்­தில் திருப்பதி பேரூர் பகு­தி­யில் ராஜ­லட்சுமி என்ற மாது தனது 10 வயது மக­னு­டன் வசித்து வந்­தார்.

தனி­யார் கல்­லூ­ரி­யில் பேரா­சி­ரி­யாக பணி­பு­ரிந்த ராஜ­லட்­சுமி, இம்­மாதம் 8ஆம் தேதி உலக மகளிர் தின­த்தன்று வீட்­டில் கால் தடுக்கி கீழே விழுந்­து தலை­யில் அடி­பட்­டு­ மாண்­டு­விட்­டார்.

ஆனால் தன்­னு­டைய தாயார் மர­ண­ம­டைந்­து­விட்­டதை அறி­யாத ஷாம் கிஷார் என்ற அந்த பையன், தனக்குத் தன் தாயார் சொல்லி கொடுத்­த­படி தானே அடுப்பை ஏற்றி சாதம் வடித்­தார். அதை தன் தாயாருக்கு ஊட்­டி­விட்­டார்.

தாயார் கோப­ம­டைந்­து­விட்­ட­தா­க­வும் அத­னால்­தான் அவர் சாப்­பி­ட­வில்லை என்­றும் நம்­பிய சிறு­வன், தாயின் சட­லத்­து­டன் இர­வில் உறங்கி காலை­யில் எழுந்து வழக்கம்­போல் பள்­ளிக்­குச் சென்று வந்­தான். வீட்­டில் இருக்­கை­யில் தொடர்ந்து தாயின் சட­லத்­திற்கு சாதம் ஊட்ட முயற்சி செய்­தான்.

இப்­ப­டியே ஐந்­தா­வது நாளாக அந்­தச் சிறு­வன் பள்­ளிக்­குச் சென்­ற­போது அவன் மீது துர்­நாற்­றம் வீசி­யது. அதை அடுத்து பள்­ளிக்­கூட ஆசி­ரி­யர்­களும் அதி­கா­ரி­களும் ராஜ­லட்­சு­மி­யின் சகோ­த­ரரைத் தொடர்­பு­கொண்­ட­னர்.

அவர் சகோ­த­ரி­யின் வீட்­டிற்­குச் சென்று அங்கு அவ­ரது உட­லைப் பார்த்­த­தும் உட­ன­டி­யாக காவல்­துறைக்குத் தக­வல் தெரி­வித்­தார்.

அதிகாரிகள் அந்த மாதின் சடலத்தை உடற்கூறு ஆய்வுக்கு அனுப்பினர். சிறுவன் ஷாம் கிஷா ருக்கு மனநிலை கோளாறு உண்டு என்று உறவினர்கள் கூறினர்.