உக்ரேனில் மாண்டவரின் உடலை மீட்க மோடி உத்தரவு

உக்ரேனில் மாண்டவரின் உடலை மீட்க மோடி உத்தரவு

1 mins read
a0d3eb9f-a24e-47e0-b9c9-dc5911611646
-

புது­டெல்லி: உக்­ரேனின் கார்­கிவ் நக­ரில் உயி­ரி­ழந்த கர்­நா­டக மாண­வர் நவீன் சேக­ரப்­பா­வின் உடலை மீட்­ப­தற்­கான அனைத்து முயற்­சி­களை­யும் மேற்­கொள்ள வேண்­டும் என அதி­கா­ரி­க­ளுக்கு பிர­த­மர் மோடி உத்­த­ர­விட்­டுள்­ளார்.

புது­டெல்­லி­யில் நேற்று நடந்த உயர்­மட்­டக் குழு கூட்­டத்­தில் பேசிய பிர­த­மர், பாது­காப்­புத் துறை­யில் இந்­தியா தன்­னி­றைவு பெற­வேண்­டும் என்று வலி­யு­றுத்­தி­னார்.

பாது­காப்­புத்­ து­றை­யில் தன்னிறைவு பெறு­வது பாது­காப்பை வலுப்­ப­டுத்­து­வ­து­டன் பொரு­ளியல் வளர்ச்­சியை மேம்­ப­டுத்­தும் என பிர­த­மர் மோடி கூறி­னார்.

உக்­ரேன் போர் சூழ­லால் இந்தி­யா­வின் பாது­காப்பு நில­வ­ரம் குறித்து அமைச்­சர்கள், அதி­கா­ரி­களு­டன் பிர­த­மர் மோடி விவா­தித்­ததாக தகவல்கள் தெரிவித்தன.