புதுடெல்லி: இந்திய நாடாளுமன்றம் இன்று கூடுகிறது. வரவுசெலவுத் திட்ட கூட்டத்தொடர் கடந்த ஜனவரி 31ஆம் தேதி தொடங்கியது. பிப்ரவரி 1ஆம் தேதி மத்திய வரவுசெலவுத் திட்டம் தாக்கல் செய்யப்பட்டது. அந்த கூட்டத்தொடரின் முதல் பகுதி பிப்ரவரி 11ஆம் தேதி வரை நடந்தது.
வரவுசெலவுத் திட்ட கூட்டத்தொடரின் 2-வது அமர்வை மார்ச் 14ஆம் தேதி முதல் ஏப்ரல் 8 ஆம்தேதி வரை நடத்த முடிவு செய்யப்பட்டு உள்ளது. ஐந்து மாநில தேர்தல் முடிந்துள்ள நிலையில் பரபரப்பான அரசியல் சூழ்நிலைகளுக்கிடையே இன்றைய கூட்டம் தொடங்க உள்ளது. பல்வேறு பிரச்சினைகளை எழுப்ப எதிர்க்கட்சிகள் முடிவு செய்துள்ளனர்.
மத்திய அரசு பொதுச் சொத்துகளை விற்பதற்கு முடிவு செய்துள்ளது. இதற்கு அனைத்து எதிர்க்கட்சிகளும் ஒருங்கிணைந்து எதிர்ப்பு தெரிவிக்க உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது.

