புதுடெல்லி: இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, உக்ரேன் நிலவரம் பற்றி விவாதிக்க நேற்று உயர் நிலைக் கூட்டத்தைக் கூட்டினார். (படம்)
உக்ரேன் மீதான ரஷ்யாவின் தாக்குதலில் ஏராளமான பொதுமக்கள், படைவீரர்கள் உயிரிழந்து விட்டதாகக் கூறப்படுகிறது.
உக்ரேனில் சிக்கியுள்ள மாணவர்கள் உட்பட ஏராளமான இந்தியர்களை தாய்நாடு அழைத்து வரும் நடவடிக்கைகளை இந்திய அரசு தீவிரப்படுத்தி உள்ளது.
இந்நிலையில், பிரதமர் நரேந்திர மோடி உக்ரேன் தொடர்பில் உயர்மட்டக் குழுக் கூட்டத்தை நேற்று புதுடெல்லியில் நடத்தினார்.
மத்திய அமைச்சர்கள் நிர்மலா சீதாராமன், ராஜ்நாத் சிங், ஜெய்சங்கர், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் உள்ளிட்டோர் அதில் பங்கேற்றனர்.
உக்ரேன் போர் சூழலால் உலக நாடுகளுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்புகள், இந்தியாவின் பாதுகாப்பு நிலவரம், முப்படைகளின் தயார் நிலை பற்றி பிரதமர் மோடி ஆலோசித்த தாக தகவல்கள் தெரிவித்தன.

