தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

அனைத்துலக புத்தகக் கண்காட்சியில் 'பிக்பாக்கெட்' அடித்த பிரபல தொலைக்காட்சி நடிகை கைது

1 mins read
c733ba43-7e85-4b17-b57e-96027ffe4887
-

கோல்­கத்தா: பிர­பல தொலைக்­காட்சி நடிகை புத்­த­கக் கண்­காட்­சி­யில் 'பிக்­பாக்­கெட்' அடித்­த­போது கையும் கள­வு­மாகப் பிடி­பட்­டார். இந்­தத் தக­வ­லைக் கேள்­விப்­பட்ட மேற்கு வங்க மக்கள் அதிர்ச்சி அடைந்­த­னர்.

கோல்­கத்­தா­வில் அனைத்­து­லகப் புத்­த­கக் கண்­காட்சி நடை­பெ­று­கிறது. நாள்­தோ­றும் ஆயி­ரக்­க­ணக்­கா­னோர் வருகை தந்து புத்­த­கங்­களை வாங்­கிச் செல்­கின்­ற­னர்.

நேற்­று­முன்­தி­னம் கண்­காட்சிக்கு வந்த சிலர் திடீ­ரென தங்­க­ளு­டைய 'மணி பர்ஸ்'களைக் காண­வில்லை என்று கண்­காட்சி ஏற்­பாட்­டா­ளர்­க­ளி­டம் புகார் தெரி­வித்­த­னர். இதை­ய­டுத்து காவல்துறைக்கு உட­ன­டி­யா­கத் தக­வல் தெரிவிக்­கப்­பட்­டது. விரைந்து வந்த காவல்­து­றை­யி­னர், கண்­காட்சி நடந்த திட­லின் முக்­கிய நுழை­வாயிலை மூடு­மாறு உத்­த­ர­விட்­ட­னர். பின்­னர் அங்­கி­ருந்த அனை­வ­ரது உடை­மை­களும் சோதிக்­கப்­பட்­டன.

தொலைக்­காட்சி நடிகை ரூபா தத்­தா­வும் (படம்) அன்று கண்­காட்­சிக்கு வந்­தி­ருந்­தார். காவல்­து­றை­யி­ன­ரின் வரு­கையை எதிர்­பார்க்­காத அவர், தாம் திருடிய 'மணி­பர்­சு'­களை தனக்கு அருகே இருந்த குப்­பைக்­கூ­டைக்­குள் வீசி, அவற்றை மறைக்­கப் பார்த்­துள்­ளார். இதைக் கவ­னித்த காவ­லர்­கள், குப்­பைக் கூடை­யில் இருந்­தவற்றைக் கீழே கொட்­டி­ய­போது, அதி­லி­ருந்து பத்­துக்­கும் மேற்­பட்ட பர்­சு­கள் விழுந்­தன. இத­னால் ரூபா தத்தா வச­மாக சிக்­கி­னார். அவ­ரி­டம் இருந்து ரூ.65,760 ரூபாய் பறி­முதல் செய்­யப்­பட்­டது. அவர் முப்­பது பேரி­டம் இருந்து திரு­டி­ய­தாக ஒப்­புக்­கொண்­டார். மேலும் பல்­வேறு இடங்­களில் அவர் இவ்­வாறு கைவ­ரிசை காட்டி­ய­தும் தெரி­ய­வந்­துள்­ளது. தாம் திரு­டிய பொருள்­கள், ரொக்­கப் பணம் குறித்த விவ­ரங்­களை டைரி ஒன்றில் அவர் எழுதி வைத்துள்ளார்.