டொரான்டோ: கனடாவில் நடந்த சாலை விபத்தில் சிக்கி ஐந்து இந்திய மாணவர்கள் பலியாகினர். கடந்த சனிக்கிழமையன்று ஒன்டோரியா நெடுஞ்சாலையில் இந்த விபத்து நிகழ்ந்துள்ளதாக ஊடகச் செய்திகள் தெரிவிக்கின்றன. மாணவர்கள் சென்ற வேன், முன்னே சென்ற ஒரு டிராக்டர் வாகனத்தின் மீது வேகமாக மோதியது. இதில் அந்த வேன் நொறுங்கிப்போனது. வேனில் பயணம் செய்த மாணவர்கள் படுகாயம் அடைந்தனர். விபத்தில் பலியான மாணவர்களின் குடும்பத்தாருக்கு மத்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் ஆறுதல் தெரிவித்துள்ளார்.
சாலை விபத்தில் மாணவர்கள் பலி
1 mins read
-

