தலையங்கித் தடை தொடரும்: கர்நாடக உயர் நீதிமன்றம்

தலையங்கித் தடை தொடரும்: கர்நாடக உயர் நீதிமன்றம்

3 mins read
ade63a69-a92d-43a4-ba30-0eac3b4d3b9b
-

பெங்­க­ளூரு: கர்­நா­டக மாநி­லத்­தில் உள்ள கல்­விக் கழ­கங்­களில் பயி­லும் மாண­வி­கள் தலை­யங்கி அணிந்து வகுப்­புக்கு வரு­வ­தற்கு விதிக்­கப்­பட்ட தடைக்கு எதி­ராக தொட­ரப்­பட்ட மனுக்­களை அம்­மாநிலத்­தின் உயர் நீதி­மன்­றம் தள்­ளு­படி செய்­துள்­ளது.

மேலும் அர­சின் சீரு­டைச் சட்­டத்­திற்கு அனை­வ­ரும் உட்­பட்­ட­வர்­களே என­வும் உத்­த­ர­வில் நீதி­மன்­றம் தெரி­வித்­துள்­ளது.

"இள­மைப் பரு­வம் என்­பது எளி­தில் தாக்­கத்­துக்கு உள்­ளா­கக் கூடியது. இந்­தப் பரு­வத்­தில் மாண­வர்­க­ளின் அடை­யா­ள­மும், சிந்­த­னை­யும் மாறக்­கூ­டி­யது. இளம் மாண­வர்­கள் தங்­கள் சுற்­றுப்­பு­றத்­தில் என்ன நடக்­கி­றதோ அதன்­பால் எளி­தில் ஈர்க்­கப்­ப­டு­வார்­கள். அவர்­கள் இனம், மதம், மொழி, சாதி, இடம் சார்ந்த தங்­கள் சுற்­றுப்­பு­றக் கருத்­து­க­ளால் ஈர்க்­கப்­ப­ட­லாம். அத­னால், இத்­த­கைய தடை உத்­த­ரவு என்­பது பிரி­வி­னை­யைத் தூண்­டும் நில­வ­ரங்­களில் இருந்து பாது­காப்­பான சூழலை உரு­வாக்­கித்­தர அவ­சி­ய­மா­கிறது. இந்­தச் சூழ­லில் மாண­வர்­க­ளுக்­குச் சீருடை என்­பது கட்­டா­ய­மா­கிறது என்று கர்நாடக உயர் நீதிமன்றம் அதன் தீர்ப்பில் தெளிவுபடுத்தியது.

உடுப்பி மாவட்­டம் குந்­தாப்­பு­ரா­வில் உள்ள அரசு பி.யூ.கல்­லூ­ரி­யில் முஸ்­லிம் மாண­வி­கள் தலை அங்கி அணிந்து வகுப்­புக்கு வந்­த­னர்.

கடந்த பிப்­ர­வரி மாதம் அந்த கல்­லூ­ரி­யின் முதல்­வர் மாண­வி­கள் தலை­யங்கி அணிந்து வகுப்­புக்கு வரு­வ­தற்­குத் தடை விதித்து உத்­த­ர­விட்­டார். இதைக் கண்­டித்து முஸ்­லிம் மாண­வி­கள் சிலர் அதே கல்­லூரி வளா­கத்­தில் போராட்­டம் நடத்­தி­னர்.

அந்­தப் போராட்­டத்­தை­ய­டுத்து இந்து மாணவ, மாண­வி­ய­ரில் சிலர் காவித் துண்டு அணிந்து வந்­தனர். இந்த விவ­கா­ரம் உடுப்பி மட்­டு­மின்றி சிவ­மொக்கா, பல்­லாரி, மண்­டியா, விஜ­யாப்­புரா, பெல­காவி, தும­கூரு, சிக்­ம­க­ளூரு என்று மாநி­லம் முழு­வ­தும் பர­வி­யது.

கடந்த மாதம் 8ஆம் தேதி சிவ­மொக்கா, தாவ­ண­கெரே உள்­ளிட்ட பகு­தி­களில் வன்­முறை வெடித்­தது. இத­னால் மாநி­லத்­தில் பதற்­றம் ஏற்­பட்­டது. இந்­தப் பதற்­றத்­தைத் தணிக்க பள்­ளி­களும் கல்­லூ­ரி­களும் தற்­கா­லி­க­மாக மூடப்­பட்­டன.

இதற்­கி­டையே மாநில அர­சின் பள்ளி கல்­வித்­துறை, மாண­வர்­கள் சீருடை தவிர மத அடை­யாள ஆடை­களை அணிந்து வகுப்­பிற்கு வரத் தடை விதித்து உத்­த­ர­விட்­டது. இந்­நி­லை­யில், தலை அங்கி விவ­கா­ரம் குறித்த பல்­வேறு மனுக்­களை கர்­நா­டக உயர் நீதி­மன்­றம் நேற்று தள்­ளு­படி செய்து உத்­த­ர­விட்­டது.

அர­சின் சீருடைச் சட்­டத்­திற்கு அனை­வ­ரும் உட்­பட்­ட­வர்­களே. எனவே பள்ளி வகுப்­பு­களில் தலை அங்கி அணி­வ­தற்­கான தடை உத்­த­ரவு தொட­ரும் என கர்­நா­டக உயர் நீதி­மன்­றம் தீர்ப்பு அளித்­தது.

சீரு­டை­யின் தேவை என்­பது அர­சி­ய­ல­மைப்­பின் 19(1)(a)இன் கீழ் கருத்­துச் சுதந்­தி­ரத்­திற்­கான அடிப்­படை உரி­மைக்கு ஒரு நியா­ய­மான கட்­டுப்­பாடு, பள்­ளிச் சீரு­டையை பரிந்­து­ரைப்­பது என்­பது ஒரு நியா­ய­மான கட்­டுப்­பாடு மட்­டுமே, அதை மாண­வர்­கள் எதிர்க்க முடி­யாது. இந்த விவ­கா­ரத்­தில் அர­சாணை வெளி­யிட மாநில அர­சுக்கு அதி­கா­ரம் உள்­ளது என்று நீதி­ப­தி­கள் தீர்ப்­பில் தெரி­வித்­துள்­ள­னர்.

இந்­நி­லை­யில் கர்­நா­டக உயர் நீதி­மன்­றத்தின் இந்­தத் தீர்ப்பை 'கேலிக்­கு­ரி­யது' என்று என காஷ்­மீர் முன்­னாள் முதல்­வர் உமர் அப்­துல்லா கூறி­யுள்­ளார். இது குறித்து ­மெகபூபா முப்தி, "கர்­நா­டக உயர் நீதி­மன்­றத்­தின் தீர்ப்பு ஏமாற்­றம் அளிக்­கிறது," என்று டுவிட்டரில் கூறியுள்ளார்.

இந்த உத்தரவுக்கு கேரள ஆளுநர் ஆரிஃப் முகமது கான் வரவேற்பு தெரிவித்துள்ளார்.

கல்வி நிலையங்களில் தலை அங்கி அணிய தடை விதித்து கர்நாடக உயர் நீதிமன்றம் அளித்த தீர்ப்புக்கு ஆதரவாகவும், எதிராகவும் பல்வேறு அரசியல் கட்சியினர் கருத்துத் தெரிவித்து வருகின்றனர்.

மனுதாரர்களில் ஒருவரின் வழக்கறிஞரான ஏ.எம் தார், தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யப்போவதாக தெரிவித்துள்ளார்.

கர்­நா­ட­கா­வின் தலை­ந­கர் பெங்­க­ளூ­ரில் 144 தடை உத்­த­ரவு பிறப்­பிக்­கப்­பட்­டி­ருப்­ப­தால், பெங்­க­ளூ­ரு­வில் பொது­வி­டங்­களில் ஐந்து பேருக்கு மேல் கூடு­வ­தற்கோ போராட்­டங்­கள் நடத்­தவோ தடை விதிக்­கப்­ப­டு­கிறது. நீதிமன்றத் தீர்ப்பை அடுத்து வன்முறைகள் வெடிக்காமல் இருக்க தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. ஆயு­தப் படை, அதி­ர­டிப்­படை உள்­ளிட்ட காவல்­துறை­யின் அனைத்­துப் பிரி­வி­ன­ரும் பாது­காப்­புப் பணி­யில் ஈடு­ப­டுத்­தப்­ப­டு­வார்­கள் என்­றும் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது. தெற்கு கன்­னட மாவட்­டங்­களில் பள்ளி, கல்­லூ­ரி­க­ளுக்கு நேற்று விடு­முறை அறி­விக்­கப்­பட்டது.

பெங்களூரில் ஊரடங்கு