உக்ரேனிலிருந்து 22,500 இந்தியர்கள் மீட்பு

உக்ரேனிலிருந்து 22,500 இந்தியர்கள் மீட்பு

1 mins read
e137f3ee-5d0b-43ec-aa4c-29639d4a3171
-

புது­டெல்லி: உக்­ரே­னில் இருந்து இது­வரை 22,500 இந்­தி­யர்­கள் மீட்­கப்­பட்­டுள்­ள­தாக மத்­திய வெளி­யு­றவு அமைச்­சர் ஜெய்­சங்­கர் மாநி­லங்­க­ள­வை­யில் செவ்­வாய்க்­கி­ழமை தெரி­வித்­தார்.

உக்­ரேன் மீது ரஷ்யா போர் தொடுத்­த­தைத் தொடர்ந்து அந்­நாட்­டில் சிக்­கி­யுள்ள இந்­தி­யர்­களை மீட்க பல்­வேறு நட­வ­டிக்­கை­களை மத்­திய அரசு மேற்­கொண்டு வரு­கிறது. இந்­நி­லை­யில் இந்­தி­யா­வின் மீட்பு நட­வ­டிக்கை குறித்து மாநி­லங்­க­ள­வை­யில் அமைச்­சர் ஜெய்­சங்­கர் நேற்று அறிக்கை தாக்­கல் செய்து உரை­யாற்­றி­னார்.

"உக்­ரே­னி­லி­ருந்து இந்­தி­யர்­களை மீட்க 'ஆபரே­ஷன் கங்கா' திட்­டம் தொடங்­கப்­பட்­டது. கடும் சவால்­க­ளுக்கு இடையே உக்­ரே­னி­லி­ருந்து 22,500க்கும் மேற்­பட்­ட­வர்­கள் மீட்­கப்­பட்­டுள்­ள­னர். அவர்­களில் ஐம்­பது விழுக்­காட்­டுக்கு மேற்­பட்ட மாண­வர்­கள் ரஷ்ய எல்­லை­யான கிழக்கு உக்­ரேன் பல்­க­லைக் கழ­கங்­களில் படித்து வந்­த­னர்.

உத்­த­ரப் பிர­தே­சம், கேர­ளம், தமி­ழ­கம், கர்­நா­ட­கம், ராஜஸ்­தான், பீகார் ஆகிய மாநி­லங்­களை சேர்ந்த அதி­க­ள­வி­லான மாண­வர்­கள் மீட்­கப்­பட்­டுள்­ள­னர் என்று அவர் மாநி­லங்­க­ள­வை­யில் தெரி­வித்­தார்.