அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளின் கடும் எதிர்ப்பையும் மீறி முதல்கட்டமாக 30 லட்சம் பீப்பாய் கச்சா எண்ணெய் வாங்க இந்தியன் ஆயில் நிறுவனம் நடவடிக்கை எடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
உக்ரேன் மீது ரஷ்யா பிப்ரவரி 24ஆம் தேதி தாக்குதல் தொடங்கிய பிறகு தற்போது 40% வரை உயர்ந்துள்ளது. உக்ரேன் மீதான தாக்குதலுக்குப் பதிலடி கொடுக்கும் வகையில் ரஷ்யாவிலிருந்து கச்சா எண்ணெய் இறக்குமதிக்கு தடை விதிப்பதாக அமெரிக்கா அறிவித்தது. ரஷ்யாவின் அனைத்து கச்சா எண்ணெய் இறக்குமதியையும் நிறுத்த இருப்பதாக பிரிட்டன் அறிவித்துள்ளது. உலக அளவில் கச்சா எண்ணெய் ஏற்றுமதியில் அமெரிக்காவுக்கு அடுத்த நிலையில் ரஷ்யா மற்றும் சவூதி அரேபியா நாடுகள் தலா 12% பங்குகளைக் கொண்டுள்ளன.