காங்கிரஸ்: சமூக ஊடகத்தின் பாதகமான ஆதிக்கம் கூடாது

காங்கிரஸ்: சமூக ஊடகத்தின் பாதகமான ஆதிக்கம் கூடாது

2 mins read
6f9082a0-2ba9-48c5-87ea-30d33488aca3
-

புது­டெல்லி: இந்­திய ஜன­நா­ய­கத்­தில் சமூக ஊட­கங்­க­ளின் தவறான தலை­யீட்டைத் தடுத்து நிறுத்த வேண்­டும் என்று நேற்று நாடா­ளு­மன்­றத்­தில் காங்­கி­ரஸ் தலைவி சோனியா காந்தி குரல்­கொ­டுத்­தார்.

சமூக நல்­லி­ணக்­கத்­தைச் சீர்­கு­லைக்­கும் வகை­யில் சமூக ஊட­கங்­கள் ஆதிக்­கம் செலுத்­து­வதை தடுக்க வேண்­டும் என்று அவர் வலி­யு­றுத்­தி­னார். இளை­ஞர்­க­ளின் சிந்­த­னையைக் கெடுத்து அவர்­களி­டம் வெறுப்­பு­ணர்வை உரு­வாக்­கும் வகை­யில் பல கருத்­து­களும் சில ஊட­கங்­கள் மூலம் பரப்­பப்­படு­வதாக அவர் தெரி­வித்­தார்.

செய்தி நிறு­வ­னங்­கள் வெளி­யி­டும் உண்­மை­யான செய்­தி­க­ளைப் போல போலி விளம்­ப­ரங்­களைச் சோடித்து அவை சமூக ஊட­கங்­களில் பதி­வேற்­றப்­ப­டு­வ­தாக சோனியா கூறி­னார்.

அண்­மை­யில் நடந்து முடிந்த சட்­ட­மன்றத் தேர்­த­லுக்­காக விளம்­பரம் செய்ய பிற கட்­சி­களைக் காட்டி­லும் பாஜ­க­வுக்குச் சலுகை விலை அளித்து ஃபேஸ்­புக் போன்ற சமூக வலைத்­தள நிறு­வ­னங்­கள் ஆத­ர­வாக செயல்­பட்­ட­தாக அல்­ஜசீரா செய்தி வெளி­யிட்­டது.

இதைச் சுட்­டிக்­காட்டி சோனியா பேசி­னார். தலை­வர்­கள், கட்­சி­கள், அவர்­களின் பினா­மி­க­ளால் அர­சி­யல் கதை­களை வடி­வ­மைக்க ஃபேஸ்புக், டுவிட்­டர் போன்ற உல­க­ளா­விய நிறு­வ­னங்­கள் அதி­க­ள­வில் பயன்­படுத்­தப்படு­வ­தாக சோனியா குறிப்­பிட்­டார்.

மற்ற அர­சி­யல் கட்­சி­க­ளு­டன் ஒப்­பி­டும்போது பாஜ­க­வின் தேர்­தல் விளம்­ப­ரங்­க­ளுக்கு ஃபேஸ்புக் சலுகை­களை வழங்கி இருப்­ப­தாக தெரிய வரு­கிறது என்­றாரவர்.

இந்­நி­லை­யில், அல்­ஜ­சீரா, தி ரிப்­போர்ட்­டர்ஸ் ஆகிய ஊட­கங்­கள் வெளி­யிட்ட செய்­தியைச் சுட்டிக் காட்டி இது பற்றி டுவிட்­ட­ரில் கருத்து தெரி­வித்த காங்­கி­ரஸ் நாடா­ளு­மன்ற உறுப்­பினர் ராகுல் காந்தி, இத்­த­கைய ஒரு நிலை ஜன­நா­ய­கத்­திற்கு மிக மோச­மானது என்று குறை கூறினார்.