தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

அமெரிக்கா போக சட்டவிரோத முயற்சி: 136 இந்தியர்கள் மாயம்

2 mins read
0eb31576-283c-4ee2-9415-f49933a9e857
-

அக­ம­தா­பாத்: அமெ­ரிக்­கா­வுக்குச் சட்­ட­வி­ரோ­த­மாகச் செல்ல முயன்ற 136 இந்­தி­யர்­களைக் காண­வில்லை என்­றும் அவர்­கள் கடத்­தப்­பட்டு இருக்­க­லாம் என்று அஞ்­சப்­ப­டு­வதா­க­வும் குஜ­ராத் காவல்துறை தெரி­வித்து இருக்­கிறது.

அமெ­ரிக்­கா­வில் சட்­ட­வி­ரோ­த­மாகத் தங்கி இருக்­கும் சுமார் 10 மில்­லி­யன் பேரில் 5.87 லட்­சம் பேர் இந்­தி­யர்­கள் என்று கூறப்­ப­டு­கிறது.

இந்­தி­யா­வின் வட மாநி­லங்­களில் இருந்து அமெ­ரிக்­கா­வுக்கு சட்­ட­வி­ரோ­த­மா­கச் செல்­வோ­ரின் எண்­ணிக்கை அதி­க­ரிக்கிறது.

இந்­நி­லை­யில், குஜ­ராத்­தின் அக­ம­தா­பாத், காந்­தி­ந­கர் உள்­ளிட்ட பல பகு­தி­களில் வசித்து வந்த சுமார் 37 குடும்­பங்­க­ளைச் சேர்ந்த 136 இந்­தி­யர்­கள், அமெ­ரிக்­கா­வில் சட்­ட­வி­ரோ­த­மாக குடி­யேற திட்டமிட்டு ஆள்க­டத்­தல் கும்­பல் உத­வியை நாடி­ய­தாக அதி­கா­ரி­கள் தெரி­வித்­த­னர்.

அந்­தக் கும்­ப­லின் உத­வி­யு­டன் கடந்த ஜன­வரி மாதம் 10ஆம் தேதி முதல் 20ஆம் தேதிக்­குள் துருக்கி சென்று அங்­கி­ருந்து விமா­னத்­தில் அல்­லது கப்­ப­லில் மெக்­சிகோ புறப்­பட்டு மெக்­சி­கோ­வில் இருந்து தரை வழி­யாக அமெ­ரிக்­கா­வுக்­குள் எல்லை கடந்து ஊடு­ருவிச் செல்­வது அவர்­க­ளின் திட்­டம்.

அப்­படி புறப்­பட்ட 136 பேரும் துருக்­கி­யின் இஸ்­தான்­புல் நக ருக்குச் சென்­ற­டைந்­த­தா­கத் தெரி­ய­ வ­ரு­கிறது. பிறகு அவர்­கள் என்ன ஆனார்­கள் என்­பது தெரி­ய­வில்லை.

துருக்­கி­யில் தரை­யி­றங்­கி­ய­தும் அந்த இந்­தி­யர்­களைச் சில குண்­டர்­கும்­பல்­கள் பிடித்து வைத்­துக்­கொண்டு ரூ. 5 லட்­சம் வரை பணம் கேட்­ப­தாக அந்த இந்­தி­யர்­க­ளின் உற­வி­னர்­க­ளுக்குச் செய்தி கிடைத்­த­தா­க­வும் ஆனால் அவர்­கள் யாரும் அது பற்றி புகார் செய்­ய­வில்லை என்­றும் குஜராத் காவல்­துறை கூறி­யது.

இதன் தொடர்­பில் விசா­ரணை நடப்­ப­தா­க­வும் அதி­கா­ரி­கள் தெரி­வித்­த­னர். அண்­மை­யில் குஜ­ராத் குடும்­பத்­தைச் சேர்ந்த நான்கு பேர் அமெ­ரிக்கா-கனடா எல்­லை­யில் கடுங்­கு­ளி­ரில் உயி­ரி­ழந்­த­னர்.

அந்­தச் சம்­ப­வத்தை அடுத்து இந்­தி­யா­வில் செயல்­ப­டும் ஆள்கடத்­தல் கும்­பல்­கள் பற்­றிய விவரங்­கள் வெளியே தெரி­ய­வந்­தன.

இந்­தி­யா­வில் செயல்­படும் ஆள்கடத்­தல் பேர்­வ­ழி­கள் துருக்கி, மெக்­சிகோ நாடு­க­ளின் கடத்­தல்­கா­ரர்­க­ளு­டன் சேர்ந்து செயல்­ப­டு­வதா­க­வும் கூறப்­ப­டு­கிறது.