அமிர்தசரஸ்: இந்தியாவில் அண்மையில் நடந்து முடிந்த உத்தரப் பிரதேசம், உத்தராகண்ட், மணிப்பூர், கோவா, பஞ்சாப் ஆகிய ஐந்து மாநில சட்டசபைத் தேர்தல்களில் காங்கிரஸ் கட்சி தோற்றது.
இதன் காரணமாக இந்த ஐந்து மாநிலங்களின் காங்கிரஸ் கட்சித் தலைவர்களும் பதவி விலகிவிட வேண்டும் என்று கட்சித் தலைவர் சோனியா காந்தி கோரினார்.
இதனை ஏற்று, பஞ்சாப் மாநில காங்கிரஸ் தலைவர் நவ்ஜோத் சிங் சித்து நேற்று பதவி விலகினார்.
உத்தரப் பிரதேச மாநில காங்கிரஸ் தலைவர் அஜய்குமார் லல்லு, உத்தராகண்ட் மாநில காங்கிரஸ் தலைவர் கணேஷ் கொடியால், கோவா காங்கிரஸ் தலைவர் கிரிஷ் சோடங்கர் ஆகியோர் ஏற்கெனவே விலகிவிட்டனர்.

