சீன அமைச்சர் வருகை வாய்ப்பு

சீன அமைச்சர் வருகை வாய்ப்பு

1 mins read
7e1e2922-b3de-446e-9060-568b5c4df4ca
-

புது­டெல்லி: இந்­தியா-சீனா எல்லையில் உள்ள லடாக் எல்­லை­யில் நடந்த மோத­லுக்குப் பின் முதல் முறை­யாக சீன வெளி­யு­ற­வு அமைச்­சர் வாங் யீ இந்த மாத இறு­தி­யில் இந்­தியா வர வாய்ப்­பு உள்­ள­தாக தக­வல்­கள் கூறின.

அப்­போது இரு­ நா­டு­க­ளுக்கு இடை­யே­யான எல்லைப் பிரச்­சினை குறித்து விவா­திக்­க­லாம் என்­றும் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.

இந்­தியா-சீனா இரு ­நா­டு­க­ளின் உறவு இப்­போது பாதிக்­கப்­பட்­டுள்ளது. எல்­லை­யில் அவ்­வப்­போது பதற்­ற­மும் நிலவி வரு­கிறது. இத­னால் இரு நாட்டு ராணு­வங்­களும் எல்­லை­யில் எப்­போ­தும் விழிப்பு நிலை­யில் இருந்து வரு­கின்­றன.

லடாக் பிரச்­சினைக்குத் தீர்வு காண இந்­தியா, சீனா இடையே ராணுவ அதி­கா­ரி­கள் சார்­பில் தொடர்ந்து பேச்­சு­வார்த்தை நடந்து வரு­கிறது.

இந்நிலையில், சீன அமைச்சர் வாங் யீ இந்தியா வர இருப்பதாக செய்தி வெளியாகி உள்ளது.