காங்கிரசுக்கு கூட்டுத்தலைமை: ஜி23 தலைவர்கள் வலியுறுத்து

காங்கிரசுக்கு கூட்டுத்தலைமை: ஜி23 தலைவர்கள் வலியுறுத்து

2 mins read
504b7143-ca21-41fb-8daf-950974e5ba04
-

குலாம் நபி ஆசாத் வீட்டில் தீவிர ஆலோசனை: சோனியாவுக்கு நெருக்கடி

புது­டெல்லி: காங்­கி­ரஸ் கட்­சியை அடுத்த நிலைக்குக் கொண்டு செல்ல வேண்­டு­மெ­னில், அனைத்து நிலை­க­ளி­லும் முடிவு எடுக்­கக்­கூடிய, அனை­வ­ரை­யும் உள்­ள­டக்கிய கூட்­டுத் தலை­மையை உரு­வாக்­கு­வது மட்­டுமே ஒரே வழி என அக்­கட்சியைச் சேர்ந்த அதி­ருப்தி குழு தலை­வர்­கள் தெரி­வித்­துள்­ள­னர்.

'ஜி23' என்று குறிப்­பி­டப்­படும் அதி­ருப்­தி­யா­ளர்­கள் குழு­வைச் சேர்ந்த முக்­கிய தலை­வர்­கள், நேற்று முன்­தினம் இரவு மூத்த தலை­வர் குலாம் நபி ஆசாத் தலைமை­யில் தீவிர ஆலோ­சனை மேற்­கொண்டனர்.

இதில், கபில்­சி­பல், ஆனந்த் சர்மா, சசி­த­ரூர், மணிஷ் திவாரி உள்­ளிட்­டோர் பங்­கேற்­ற­னர். ராஜீவ்­காந்தி குடும்­பத்­தின் தீவிர விசு­வாசி­யா­கக் கரு­தப்­படும் மணி­சங்­கர் அய்­ய­ரும் கலந்து கொண்­டார். இந்த ஆலோ­ச­னைக் கூட்­டத்­துக்­குப் பின்னர் 'ஜி23' தலை­வர்­கள் சார்­பில் கூட்­ட­றிக்கை ஒன்று வெளியிடப்­பட்­டது.

அதில், பாஜ­கவை தீவி­ர­மாக எதிர்க்க வேண்­டு­மா­னால் காங்­கி­ரஸ் கட்­சியை வலுப்­ப­டுத்த முன்­னு­ரிமை அளிக்க வேண்­டும் எனக் குறிப்­பி­டப்­பட்­டுள்­ளது.

"எதிர்­வ­ரும் 2024ஆம் ஆண்டு நாடா­ளு­மன்­றத் தேர்­த­லுக்­குள் பாஜ­க­வுக்கு எதி­ராக நம்­பிக்­கைக்­கு­ரிய மாற்று அணியை உரு­வாக்க வேண்­டும். அதற்கு ஒத்த கருத்­து­டைய கட்­சி­க­ளு­டன் காங்­கி­ரஸ் பேச்சு­வார்த்­தையைத் தொடங்க வேண்­டும்," என அந்த அறிக்­கை­யில் மேலும் வலி­யு­றுத்தப்பட்டுள்ளது.

இதற்­கி­டையே குஜ­ராத் முன்­னாள் முதல்­வர் சங்­கர் சிங் வகேலா உள்­ளிட்ட மேலும் சிலர் 'ஜி23' குழு­வில் இணைந்­துள்­ள­னர். இத­னால் இக்­கு­ழு­வின் பலம் அதி­க­ரித்து வரு­கிறது.

நேற்று முன்­தி­னம் காங்­கிரஸ் மூத்த தலை­வர் கபில்­சி­பல், கட்சியை வலுப்­ப­டுத்த வேண்­டு­மெ­னில், காந்தி குடும்­பத்­தி­னர் தலை­மைப் பொறுப்­பில் இருந்து வில­கி­ நிற்க வேண்­டும் என்று கூறி­யி­ருந்­தார். இதற்கு சோனியா காந்­தி­யின் ஆத­ர­வா­ளர்­கள் கடும் எதிர்ப்பு தெரி­வித்­துள்­ள­னர்.

கட்­சியைப் பிள­வு­ப­டுத்­தும் நோக்­கில் 'ஜி23' தலை­வர்­கள் தனி­யாக சந்­தித்துப் பேசி வரு­வ­தா­க­வும் நூறு கூட்­டங்­களை நடத்­தி­னா­லும் சோனி­யாவை பல­வீ­னப்­ப­டுத்த முடி­யாது என்­றும் காங்­கி­ரஸ் மூத்த தலை­வர் மல்­லி­கார்­ஜுன கார்கே கூறி­யுள்­ளார். ஒட்­டு­மொத்த கட்சி­யும் சோனி­யா­வுக்கு ஆத­ர­வாக உள்­ளது என்­றார் அவர்.

இதற்­கி­டையே, குலாம் நபி ஆசாத்தை நேற்று முன்­தி­னம் இரவு சோனியா தொடர்பு கொண்டு பேசி­ய­தா­க­வும் 'ஜி23' தலை­வர்­களைச் சந்­திக்கத் தயார் என்று கூறி­ய­தா­க­வும் ஹிந்­துஸ்­தான் டைம்ஸ் ஊட­கச் செய்தி தெரி­விக்­கிறது.

சோனியா காந்தி, 'ஜி23' தலை­வர்­கள் இடை­யே­யான சந்­திப்­புக்­குப் பிறகே காங்­கி­ரஸ் கட்­சித் தலைமை­யில் மாற்­றம் ஏற்­ப­டுமா அல்­லது கூட்­டுத்­த­லை­மைக்கு சோனியா காந்தி ஒப்­புக்­கொள்­வாரா என்­பது தெரி­ய­வ­ரும்.

அவரது ஆதரவாளர்களும் கடந்த இரு தினங்களாக தீவிர ஆலோசனையில் ஈடுபட்டுள்ளனர்.

இந்­நி­லை­யில், கூட்­டுத் தலைமை என்ற ஏற்­பாடு அடுத்த நாடா­ளு­மன்­றத் தேர்­த­லில் காங்­கி­ர­சுக்­குப் பின்­ன­டைவை ஏற்­ப­டுத்த வாய்ப்­பு உள்­ள­தாக அர­சி­யல் கவ­னிப்­பா­ளர்­கள் சிலர் கரு­து­கின்­ற­னர்.