கனிவாக நடந்துகொண்டால் மட்டுமே பதவி உயர்வு

கனிவாக நடந்துகொண்டால் மட்டுமே பதவி உயர்வு

1 mins read
226b2e45-7c34-43bd-a0a8-0b96754f9c9d
-

திரு­வ­னந்­த­புரம்: பொது­மக்­க­ளி­டம் கனி­வாக நடந்­து­கொள்­ளும் அரசு அதி­கா­ரி­க­ளுக்கு மட்­டுமே இனி பதவி உயர்வு அளிக்­கப்­படும் என கேரள அரசு அறி­வித்­துள்­ளது.

பதவி உயர்வு அளிப்­ப­தற்கு முன்பு அரசு ஊழி­யர்­க­ளுக்கு குறிப்­பிட்ட சில அம்­சங்­க­ளின் அடிப்­ப­டை­யில், பத்து மதிப்­பெண்­கள் வரை அளிக்­கப்­படும் என்­றும் ஐந்து மதிப்­பெண்­க­ளுக்கு மேல் பெற்­றால்­தான் பதவி உயர்­வுக்கு தகுதி பெறு­வர் என்­றும் அறி­விக்­கப்­பட்­டுள்­ளது.

பணி­யா­ள­ரின் திறமை, அவர் பணி­யி­டத்­தில் நடந்­து­கொள்­ளும் முறை, அலு­வ­லக கோப்­பு­களை விரை­வாக பார்த்து அனுப்­பு­வது, அதன் குறை­களை உட­ன­டி­யாக சுட்­டிக்­காட்­டு­வது ஆகி­ய­வற்­றுக்கு மதிப்­பெண்­கள் வழங்­கப்­படும்.

மேலும், அரசு சேவை­க­ளுக்­காக அரசு அலு­வ­ல­கங்­க­ளுக்கு வரும் பொது­மக்­க­ளி­டம் கனி­வாக நடந்­து­கொள்­வது அவ­சி­யம் என்­றும் பொது­மக்­கள் அளிக்­கும் புகார்­கள் பதவி உயர்­வைப் பாதிக்­கும் என்­றும் கேரள அரசு தெரி­வித்­துள்­ளது.

இந்­தப் புதிய நடை­மு­றைக்கு அரசு ஊழி­யர்­கள் மத்­தி­யில் எதிர்ப்பு கிளம்­பி­யுள்­ளது.