இலங்கைக்கு ஒரு பில்லியன் டாலர் கடன்

இலங்கைக்கு ஒரு பில்லியன் டாலர் கடன்

1 mins read
e35cfa47-b0de-4aba-bf6f-3ed62ab85a39
-

புது­டெல்லி: கடும் பொரு­ளா­தார நெருக்­க­டி­யில் சிக்­கி­யுள்ள இலங்கை அர­சுக்கு உத­வும் வகை­யில் ஒரு பில்­லி­யன் அமெரிக்க டாலரை கட­னாக வழங்கி உள்ளது இந்தியா. இத்­தொ­கை­யைக் கொண்டு மருந்து, உணவு உள்­ளிட்ட அத்­தி­யா­வ­சி­யப் பொருள்­களை இலங்கை வாங்க உள்­ளது.

மேலும் பொரு­ளி­யல் நெருக்­கடி­யில் இருந்து விடு­ப­டு­வ­தற்­கான நட­வ­டிக்­கை­க­ளை­யும் அந்­நாடு மேற்­கொள்­ளும்.

நேற்று முன்­தி­னம் டெல்லி வந்த இலங்கை நிதி­ய­மைச்­சர் பசில் ராஜ­பக்சே, இந்­திய வெளி­யு­றவு அமைச்­சர் ஜெய்­சங்­கர், நிதி­ய­மைச்­சர் நிர்­மலா சீதா­ரா­மன் ஆகி­யோரை சந்­தித்­தார். இரு­த­ரப்­புக்­கும் இடை­யே­யான பொரு­ளி­யல் ஒத்­து­ழைப்பு குறித்து அப்­போது பேசப்­பட்­டது.

அதன் பின்­னர் ஒரு பில்­லி­யன் டாலர் கடன் தொடர்­பாக இந்­தி­யா­வின் எஸ்­பிஐ வங்­கிக்­கும் இலங்கை அர­சுக்­கும் இடையே ஒப்­பந்­தம் கையெ­ழுத்­தா­னது.

முன்­ன­தாக, பிர­த­மர் மோடியை சந்­தித்த, இலங்கை நிதி­ய­மைச்­சர் பசில் ராஜ­பக்சே, பொரு­ளி­யில் நெருக்­க­டி­யில் உள்ள இலங்­கைக்கு உதவ வேண்­டும் என கோரிக்கை விடுத்­த­து­டன், நடப்பு விவ­கா­ரங்­கள் குறித்­தும் விவா­தித்­த­தாக ஊட­கத் தக­வல்­கள் தெரி­விக்­கின்­றன.

பசில் ராஜ­பக்சே உட­னான சந்­திப்பு குறித்து டுவிட்­ட­ரில் பதி­விட்­டுள்ள வெளி­யு­றவு அமைச்­சர் ஜெய்­சங்­கர், "முத­லில் அண்டை நாடு. இந்­தியா, இலங்­கை­யின் பக்­கம் நிற்­கிறது. அத்­தி­யா­வ­சிய பொருள்­கள் விநி­யோ­கத்­திற்­காக இலங்­கைக்கு ஒரு பில்­லி­யன் அமெ­ரிக்க டாலர்­களை தரு­வ­தற்­கான ஒப்­பந்­தம் கையெ­ழுத்­தா­னது," என்று குறிப்­பிட்­டுள்­ளார்.