இலங்கையில் பெட்ரோல் வாங்க நீண்ட நேரம் வரிசையில் காத்திருந்த இரு முதியவர்கள் பலி

இலங்கையில் பெட்ரோல் வாங்க நீண்ட நேரம் வரிசையில் காத்திருந்த இரு முதியவர்கள் பலி

2 mins read
3f1005e8-3416-4448-80fc-7f93b37e4827
-

கொழும்பு: இலங்­கை­யில் பொரு­ளி­யல் நெருக்­கடி அதி­க­ரித்து வரும் நிலை­யில், அங்கு பெட்­ரோல் வாங்க வரி­சை­யில் காத்­தி­ருந்­த­போது, இரண்டு ஆட­வர்­கள் உயி­ரி­ழந்­த­னர்.

இலங்­கை­யில் வர­லாறு காணாத அள­வுக்கு விலை­வாசி உயர்ந்­துள்­ளது. இதை­ய­டுத்து, பொது­மக்­கள் போராட்­டத்­தில் குதித்­துள்­ள­னர்.

பெட்­ரோல், மண்­ணெண்­ணெய்க்கு கடும் தட்­டுப்­பாடு நில­வு­கிறது. கடந்த சில வாரங்­க­ளாக பொது­மக்­கள் இவற்றை வாங்க விற்­பனை நிலை­யங்­களில் நீண்ட வரி­சை­களில் காத்­துக் கிடக்­கின்­ற­னர். நாட்­டின் பெரும்­பா­லான பகு­தி­களில் மின்­வெட்டு அம­லில் உள்­ளது.

இந்­நி­லை­யில், 70 வய­தைக் கடந்த ஆட­வர்­கள் உயி­ரி­ழந்த தக­வல் இலங்கை மக்­கள் மத்­தி­யில் கொந்­த­ளிப்பை அதி­கப்­ப­டுத்தி உள்­ளது.

"இறந்த ஆட­வர்­களில் ஒரு­வர் 70 வய­தான, மூன்று சக்­கர வாகன ஓட்­டு­நர். அவர் நீரி­ழிவு, இதய நோயாளி ஆவார். இரண்­டா­வது ஆட­வர் 72 வய­தைக் கடந்த முதி­ய­வர்.

"இவ்­வி­ரு­வ­ரும் சுமார் நான்கு மணி நேரத்­துக்கு மேலாக விற்­பனை நிலை­யத்­தில் காத்­துக்­கி­டந்த போது உயி­ரி­ழந்­த­னர்," என்று கொழும்பு காவல்­துறை செய்­தித்­தொ­டர்­பா­ளர் தெரி­வித்­தார்.

இதற்­கி­டையே, கடந்த ஞாயிற்­றுக்­கி­ழ­மை­யு­டன் இலங்கை அரசு கச்சா எண்­ணெய் சுத்­தி­க­ரிப்பு நிலை­யத்­தின் செயல்­பா­டு­களை நிறுத்­திக்­கொண்­டது.

கையி­ருப்­பில் இருந்த கச்சா எண்­ணெய் முற்­றி­லு­மாக தீர்ந்­து­விட்­டதை அடுத்து, சுத்­தி­க­ரிப்பு நிலை­யப் பணி­கள் முடி­வுக்கு வந்­தன.

சமை­யல் எரி­வாயு விநி­யோ­கம் குறைந்­து­விட்ட நிலை­யில், அதன் விலை வெகு­வாக அதி­க­ரித்­த­தால் மக்­கள் மண்­ணெண்­ணெய் வாங்­கு­வ­தில் ஆர்­வம் காட்­டு­கின்­ற­னர்.

இலங்கையில் தற்போது கடும் பொருளியல் நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, பல்வேறு நாடுகளிலும் இலங்கை அரசாங்கம் கடனுதவி அளிக்குமாறு கோரிக்கை விடுத்து வருகிறது.

முதல் கட்டமாக, இந்திய அரசிடம் முன்வைக்கப்பட்ட கோரிக்கையை ஏற்று அண்மையில் இலங்கைக்கு இந்தியா உதவியது.

அந்த கடன் தொகையை வைத்து அத்தியாவசிய பொருள்களை வாங்க இருப்பதாக இலங்கை அரசு தெரிவித்துள்ளது.

எனினும், அங்கு மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. மக்கள் வீடுகளை விட்டு வெளியேற முடியாமல் முடங்கி உள்ளதாக இலங்கை ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.