மோடி: முன்னேற்றமும் கூட்டாண்மையுமே ஜப்பானுடனான உறவின் அடிப்படை

மோடி: முன்னேற்றமும் கூட்டாண்மையுமே ஜப்பானுடனான உறவின் அடிப்படை

1 mins read
3dfd1a18-f554-4a1f-8f5f-e465eef991ba
இந்திய, ஜப்பான் உச்ச மாநாட்டின் போது இரு நாடுகளின் பிரதமர்களும் பல்வேறு புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் கையெழுத் திட்டனர். படம்: இபிஏ -

புது­டெல்லி: இந்­தி­யா­வில் உள்ள ஜப்­பா­னிய நிறு­வ­னங்­க­ளுக்கு தன்னால் இயன்ற அனைத்து உதவிகளையும் ஆத­ர­வை­யும் வழங்க இந்­திய அரசு கட­மைப்­பட்­டுள்­ளது என பிர­த­மர் மோடி தெரி­வித்­துள்­ளார்.

முன்­னேற்­றம், செழிப்பு, கூட்­டாண்மை ஆகி­ய­வை­தான் இரு நாடு­க­ளுக்கு இடை­யே­யான உற­வு­க­ளின் அடிப்­படை என்று அவர் குறிப்­பிட்­டுள்­ளார்.

டெல்­லி­யில் நேற்று முன்­தி­னம் நடை­பெற்ற இந்­தியா, ஜப்­பான் இடை­யே­யான உச்ச நிலை மாநாட்­டில் பல்­வேறு புரிந்­து­ணர்வு ஒப்­பந்­தங்­கள் கையெ­ழுத்­தா­கின.

இணை­யப் பாது­காப்பு, திறன் மேம்­பாடு, தக­வல் பதிவு உள்­ளிட்ட பல்­வேறு துறை சார்ந்த இந்த ஒப்­பந்­தங்­கள் வழி, இந்­தி­யா­வில் அடுத்த ஐந்து ஆண்­டு­களில் ஜப்­பான் சுமார் 42 பில்­லி­யன் டாலர் முத­லீடு செய்ய உள்­ளது.

மாநாட்­டில் பேசிய பிர­த­மர் மோடி, இந்­தியா, ஜப்­பான் இடை­யே­யான பொரு­ளா­தா­ரக் கூட்­டு­ற­வில் நல்ல முன்­னேற்­றம் ஏற்­பட்­டுள்­ள­தா­க­வும் இந்­தி­யா­வில் அதிக முத­லீ­டு­க­ளைச் செய்­யும் நாடு­களில் ஜப்­பா­னும் ஒன்று என்­றும் குறிப்­பிட்­டார்.

பிர­த­மர் கிஷிடா இந்­தி­யா­வின் பழைய நண்­பர் என்­றும் ஜப்­பானின் வெளி­யு­றவு அமைச்­ச­ராக கிஷிடா இருந்­த­போது அவ­ரு­டன் கருத்­துக்­களை பரி­மா­றிக்­கொள்­ளும் வாய்ப்பு தமக்­குக் கிடைத்­தது என்­றும் பிர­த­மர் மோடி நினை­வு­கூர்ந்­தார்.

"பாது­காப்­பான, நம்­ப­க­மான, நிலை­யான எரி­சக்தி விநி­யோ­கத்­தின் முக்­கி­யத்­து­வத்தை இந்­தி­யா­வும் ஜப்­பா­னும் புரிந்­து­கொண்­டுள்­ளன. நிலை­யான பொரு­ளா­தார வளர்ச்­சியை அடை­ய­வும் பரு­வ­நிலை மாற்­றத்தை சமா­ளிக்­க­வும் இது அவ­சி­யம்," என்­றார் பிர­த­மர் மோடி.

இந்­தி­யா­வில் தொழில் தொடங்க மேலும் பல ஜப்­பான் நிறு­வ­னங்­கள் முன்­வர வேண்­டும் என்­றும் அவர் வேண்­டு­கோள் விடுத்­தார்.