அமித் ஷா: சில ஆண்டுகளில் காஷ்மீரில் இருந்து துணை ராணுவப்படை விலக்கிக் கொள்ளப்படும்

அமித் ஷா: சில ஆண்டுகளில் காஷ்மீரில் இருந்து துணை ராணுவப்படை விலக்கிக் கொள்ளப்படும்

2 mins read
5c0ecdbe-8fcf-4198-a599-bd9758e343e2
-

ஸ்ரீந­கர்: இன்­னும் சில ஆண்­டு­களில் காஷ்­மீ­ரி­ல் இ­ருந்து துணை ராணு­வப்­படை விலக்கி கொள்­ளப்­படும் என மத்­திய உள்­துறை அமைச்­சர் அமித் ஷா தெரி­வித்­துள்­ளார்.

காஷ்­மீ­ரில் முழு அமை­தியை ஏற்­ப­டுத்த முடி­யும் என்ற நம்­பிக்கை தமக்கு உள்­ள­தாக அவர் குறிப்­பிட்டுள்­ளார்.

மத்­திய ரிசர்வ் காவல் (சிஆர்­பி­எஃப்) படை­யின் 83வது எழுச்சி நாள் அணி­வ­குப்பு ஸ்ரீந­க­ரில் நடை­பெற்­றது. இதில் கலந்­து­கொண்டு பேசிய அமித் ஷா, முதன்­மு­றை­யாக டெல்­லி­யில் உள்ள சிஆர்­பி­எஃப் தலை­மை­ய­கத்­திற்கு வெளியே, இந்த அணி­வ­குப்பு நடை­பெ­று­கிறது என்றார்.

ஜம்மு காஷ்­மீ­ரில் பாகிஸ்­தா­னால் கட்­ட­விழ்க்­கப்­பட்ட பயங்­க­ர­வா­தத்தை மத்­திய படை­கள் கட்­டுப்­ப­டுத்தி உள்­ள­தா­கக் குறிப்­பிட்ட அவர், இது மிகப்­பெ­ரிய பணி என்­றார்.

"இன்­னும் சில ஆண்­டு­களில், இந்­தி­யா­வின் வட­கி­ழக்கு மாநி­லங்­க­ளி­லும் காஷ்­மீ­ரி­லும் நக்­சல்­கள் இருக்­கும் பகு­தி­க­ளி­லும் மத்­திய ரிசர்வ் காவல் படைக்கு (துணை ராணு­வப்­படை) வேலை இருக்­காது.

"அங்கு நம்­மால் முழு அமை­தியை ஏற்­ப­டுத்த முடி­யும் என்ற நம்­பிக்கை எனக்கு உள்­ளது. அப்­படி நடந்­தால் அதற்­கான மொத்த பெரு­மை­யும் துணை ராணு­வப் படை­யி­ன­ரையே சேரும்," என்­றார் அமித் ஷா.

காஷ்­மீ­ரில் இருக்­கும் பலத்த பாது­காப்பு நீக்கி கொள்­ளப்­ப­டு­கிறது என்ற அறி­விப்பை மத்­திய அரசு ஏற்­கெ­னவே வெளி­யிட்­டுள்­ள­தா­கக் குறிப்­பிட்ட அவர், அதற்­கான கால அள­வும் நிர்­ண­யிக்­கப்­பட்­டுள்­ள­தா­கச் சுட்­டிக்­காட்­டி­னார்.

பாது­காப்­புப் படை­யி­னர் பயங்­க­ர­வா­தத்தை கட்­டுப்­ப­டுத்தி வைத்­தி­ருப்பது என்­பது இந்­திய அர­சி­ய­லமைப்பு பிரிவு 370 நீக்­கப்­பட்­ட­தால் ஏற்­பட்ட மிகப்­பெ­ரிய சாதனை என்றார் அமித் ஷா.

"காஷ்­மீ­ரில் ஜன­நா­ய­கம் செழுத்­திட, அடி­மட்ட அள­வில் பேச்­சு­வார்த்தை நடை­பெற்­றது. இங்கு ரூ.33,000 கோடி மதிப்­பீட்­டில் முத­லீ­டு­கள் செய்­யப்­பட உள்­ளன. இங்­குள்ள உள்­ளாட்சி நிர்­வா­கம் ஊழ­லுக்கு எதி­ரா­கச் சிறப்­பா­கச் செயல்­ப­டு­கிறது," என்­றார் அமித் ஷா.

முன்­ன­தாக அவர் ஜம்மு காஷ்­மீர் பாது­காப்பு நில­வ­ரம் குறித்து நேரில் ஆய்வு மேற்­கொண்டார்.