'பஞ்சாப் முதல்வர் நிர்ணயித்த இலக்குகளை அடையவேண்டும்' அமைச்சர்களுக்கு கெஜ்ரிவால் எச்சரிக்கை

'பஞ்சாப் முதல்வர் நிர்ணயித்த இலக்குகளை அடையவேண்டும்' அமைச்சர்களுக்கு கெஜ்ரிவால் எச்சரிக்கை

2 mins read
8fd43baa-4b8e-44d1-b76a-3ac3ad56f7f8
கெஜ்ரிவால். படம்: ஊடகம் -

சண்­டிகர்: பஞ்­சாப் மாநி­லத்­தில் அமைச்­ச­ரா­கப் பத­வி­யேற்­றுக் கொண்­ட­வர்­கள் அம்­மா­நில முதல்­வர் பக­வந்த் மான் நிர்­ண­யித்­துள்ள இலக்­கு­களை எட்­டிப்­பி­டிக்க இய­லா­விட்­டால் பதவி வில­கத் தயா­ராக இருக்க வேண்­டும் என ஆம் ஆத்மி தலைமை ஒருங்­கி­ணைப்­பா­ளர் கெஜ்­ரி­வால் எச்­ச­ரித்­துள்­ளார்.

மக்­க­ளின் பணம் திரு­டப்­ப­டு­வதை தம்­மால் பொறுத்­துக்­கொள்ள இய­லாது என்­றும் அவர் கூறியுள்ளார்.

பஞ்­சாப்­பில் முதன்­மு­றை­யாக ஆட்­சி­ய­மைக்­கிறது ஆம் ஆத்மி. இதை­ய­டுத்து முதல்­வ­ராக பக­வந்த் மானும் பத்து அமைச்­சர்­களும் பதவி­யேற்­றுள்­ள­னர்.

இதை­ய­டுத்து முதல்­வர், அமைச்­சர்­கள், கட்சி எம்­எல்­ஏக்­க­ளு­டன், டெல்லி முதல்­வ­ரு­மான அர­விந்த் கெஜ்­ரி­வால் நேற்று முன்­தி­னம் காணொளி வசதி மூலம் உரை­யாற்­றி­னார்.

புதி­தாக நிய­மிக்­கப்­பட்­டுள்ள அமைச்­சர்­கள் தீவி­ர­மாக செயல்­பட வேண்­டும் என அப்­போது அவர் வலி­யு­றுத்­தி­னார். கட்­சி­யின் 92 எம்­எல்­ஏக்­களும் முதல்­வர் பக­வந்த் மான் தலை­மை­யில் வலு­வான அணி­யாக, நேர்­மை­யு­டன் பணி­யாற்ற வேண்­டும் என்­றார் கெஜ்­ரி­வால்.

"கட்­சித் தலை­வர்­கள் ஏதே­னும் தவ­று­களில் ஈடு­பட்­டால் கடு­மை­யான நட­வ­டிக்கை எடுக்­கப்­படும். என்­னால் எதை­யும் பொறுத்­துக் கொள்ள முடி­யும். ஆனால், நேர்மை­யின்மை, மக்­க­ளின் பணத்தை திரு­டு­வது ஆகி­ய­வற்றை மட்­டும் ஏற்க முடி­யாது.

"இத்­த­கைய தவ­று­க­ளைச் செய்­ப­வர்­க­ளுக்கு ஒரு வாய்ப்பு கூட வழங்­கப்­ப­ட­மாட்­டாது," என்­றார் முதல்­வர் கெஜ்­ரி­வால்.

பாஜ­க­வில் உட்­கட்­சிப்­பூ­சல் நில­வு­வ­தா­கக் குறிப்­பிட்ட அவர், அதன் கார­ண­மா­கவே அக்­கட்­சி­யால் நான்கு மாநி­லங்­களில் வெற்­றி­பெற்­றுள்ள போதி­லும் இன்­னும் ஆட்­சியை அமைக்க முடி­ய­வில்லை என்றார்.

பஞ்­சாப் சட்­டப்­பே­ர­வை­யில் ஆம் ஆத்மி எம்­எல்­ஏக்­கள் உட­ன­டி­யாக பத­வி­யேற்­றுக் கொண்­ட­தா­க­வும் நேரத்தை வீண­டிக்­கா­மல் ஆம் ஆத்மி ஆட்சி அமைக்­கப்­பட்­டுள்­ளது என்­றும் குறிப்­பிட்ட அவர், பஞ்­சாப்­பில் புதிய அரசு வேலை செய்­யத் தொடங்­கி­விட்­டது என்­றார்.

"ஒட்­டு­மொத்த நாடும் இப்­போது பக­வந்த் மான் பற்­றி­தான் பேசு­கிறது. அக்­டோ­ப­ரில் சேத­மடைந்த பயிர்­க­ளுக்கு இழப்­பீட்டுத் தொகை அறி­விக்­கப்­பட்­டுள்­ளது. வரும் நாள்­களில் விவ­சா­யி­க­ளுக்கு காசோ­லை­கள் வழங்­கப்­படும்.

"அர­சாங்­கத்தை அமைத்து மூன்று நாள்­க­ளுக்­குள் நீங்­கள் சிறப்­பா­கச் செயல்­பட்­டுள்­ளீர்­கள். பக­வந்த் மானின் பணி குறித்து நான் மகி­வும் பெரு­மைப்­ப­டு­கி­றேன்," என்­றார் முதல்­வர் கெஜ்­ரி­வால்.