ஜிதேந்திர சிங்: ஆக்கிரமிப்பு காஷ்மீர் மீட்கப்படுவது உறுதி

ஜிதேந்திர சிங்: ஆக்கிரமிப்பு காஷ்மீர் மீட்கப்படுவது உறுதி

2 mins read
c81868c7-b410-430e-9eaa-edd8bab7a99c
-

ஸ்ரீந­கர்: காஷ்­மீ­ருக்கு சிறப்பு அந்­தஸ்து வழங்­கிய 370வது சட்­டப்­பிரிவு ரத்து செய்­யப்­பட்­டது போல, பாகிஸ்­தான் ஆக்­கி­ர­மிப்பு காஷ்­மீர் பகுதி மீட்­கப்­படும் என மத்­திய பிர­த­மர் அலு­வ­லக விவ­கா­ரத்­துறை இணை­ய­மைச்­சர் ஜிதேந்­திர சிங் தெரி­வித்­துள்­ளார்.

நாட்டு மக்­கள் எதிர்­பார்க்­காத வகை­யில் மேற்­கொள்­ளப்­பட்ட சில நட­வ­டிக்­கை­க­ளைப் போல், ஆக்­கி­ர­மிப்பு காஷ்­மீ­ரும் மீட்­கப்­படும் என்று காஷ்­மீ­ரின் கத்­துவா பகு­தி­யில் நடை­பெற்ற நிகழ்ச்­சி­யில் பேசி­ய­போது அவர் குறிப்­பிட்­டார்.

"கடந்த 1980ஆம் ஆண்டு பாஜக தொடங்­கப்­பட்ட போது மத்­தி­யில் ஆட்­சி­ய­மைப்­போம் என்று அக்­கட்சி நிர்­வா­கி­கள் தெரி­வித்­த­னர். அப்­போது பலர் அதைக் கிண்­டல் செய்­த­னர். ஆனால், பாஜக தான் சொன்­னதை செய்து காட்­டி­யுள்­ளது.

"மேலும், தான் அளித்த ஒவ்­வொரு வாக்­கு­று­தி­யை­யும் பாஜக அரசு நிறை­வேற்றி வரு­கிறது," என்­றார் அமைச்­சர் ஜிதேந்­திர சிங்.

370வது சட்­டப் பிரிவு நீக்­கப்­படும் என்று சொன்­ன­போ­தும் மத்­திய பாஜக அரசை பலர் கிண்­டல் செய்­த­தாக குறிப்­பிட்ட அவர், பாஜக சொன்­ன­படி செய்து காட்­டி­யது என்­றும் அதே போல் ஆக்­கி­ர­மிப்பு காஷ்­மீ­ரும் மீட்­கப்­படும் என்­றும் தெரி­வித்­தார்.

"1994இல் சட்­ட­வி­ரோ­த­மாக ஆக்­கி­ர­மிக்­கப்­பட்ட ஜம்மு காஷ்­மீர் பகு­தி­களை விட்டு, பாகிஸ்­தான் வெளி­யேற வேண்­டும் என்று நாடா­ளு­மன்­றத்­தில் ஒரு­ம­ன­தாக தீர்­மா­னம் நிறை­வேற்­றப்­பட்­டது. இந்த வாக்­கு­று­தியை பாஜ­க­வின் மூத்த தலை­வ­ரும் முன்­னாள் பிர­த­ம­ரு­மான வாஜ்­பாய் அளித்­தார் என்­பதை அனை­வ­ரும் நினை­வில் கொள்ள வேண்­டும்," என்­றார் அமைச்­சர் ஜிதேந்­திர சிங்.

ஜம்மு காஷ்­மீ­ரில் நடை­பெற்று வரும் அனைத்து வளர்ச்­சிப் பணி­க­ளை­யும் பிர­த­மர் மோடி கண்­கா­ணித்து வரு­வ­தா­கக் குறிப்­பிட்ட அவர், பிர­த­ம­ருக்கு காஷ்­மீர் மக்­க­ளின் முழு ஆத­ரவு உண்டு என்­றார்.