10 பேர் உயிரோடு எரித்துக் கொலை

10 பேர் உயிரோடு எரித்துக் கொலை

1 mins read
79e488af-6a8c-4689-a795-4c7be16dc2fd
-

கோல்­கத்தா: மேற்கு வங்­காள மாநி­லத்­தில் பழிக்­குப்பழி வாங்­கும் செய­லில் 10 பேர் தீயில் கருகி மாண்­ட­னர்.

பிர்­பம் மாவட்டம் ராம்­பு­ர­ஹத் பகு­தி­யில் உள்ள பகுடி கிராம துணைத் தலை­வர் பது பிர­தான் என்­ப­வர் திங்­கள்­கி­ழமை கொலை செய்­யப்­பட்­டார்.

மர்ம நபர்­கள் நாட்டு வெடி­குண்டு வீசி­ய­தில் காய­ம­டைந்த அவர் மருத்­து­வ­ம­னை­யில் மாண்­டார். இத­னைக் கேள்­விப்­பட்டு ஆத்­தி­ர­முற்ற அவ­ரது ஆத­ர­வா­ளர்­கள் எதிர்த்­த­ரப்­பி­னர் குடி­யி­ருக்­கும் பல குடி­சை­க­ளுக்கு தீ வைத்­த­னர். இதில் சுமார் 10 பேர் உயி­ரோடு எரித்­துக் கொலை செய்­யப்­பட்­டி­ருப்­ப­தாக செய்­தி­கள் வெளி­யா­கி­யுள்­ளன.

தக­வல் அறிந்­த­தும் விரைந்­துச் சென்ற தீய­ணைப்பு வீரர்­களை சம்­பவ பகு­திக்­குள் நுழைய விடா­மல் அந்­தக் கும்­பல் தடுத்­துள்­ளது.

சம்­பவப் பகு­தி­யில் குறைந்­த­பட்­சம் 10 எரிந்த உடல்­க­ளைக் கண்­ட­தாக சிலர் கூறி­னர்.

பல உடல்­கள் அடை­யா­ளம் காண முடி­யாத அள­வுக்கு கரு­கி­ விட்­ட­தா­க­வும் ஒரு வீட்­டி­லி­ருந்து மட்­டும் 7 உடல்­க­ள் கைப்­பற்­றப்பட்டதாகவும் தக­வல்­கள் கூறின.

கொலை செய்­யப்­பட்ட கிரா­மத் துணைத் தலை­வர் ஆளும் திரி­ணா­மூல் காங்­கி­ரஸ் கட்­சி­யைச் சேர்ந்­த­வர் என்று கூறப்­ப­டு­கிறது.