ஓமிக்ரான் அச்சுறுத்தல் ஓயவில்லை: மத்திய அரசு

ஓமிக்ரான் அச்சுறுத்தல் ஓயவில்லை: மத்திய அரசு

1 mins read
83fa5a92-9e0b-4a8e-962e-32db4645f39a
-

புது­டெல்லி: இந்­தியா முழு­வ­தும் புதி­தாக கொரோனா கிரு­மித்­தொற்­றால் பாதிக்­கப்­ப­டு­வோர் எண்­ணிக்கை அண்­மைக் கால­மாக வெகு­வா­கக் குறைந்து வரு­கிறது.

இந்த நிலை­யில், கொரோனா 4வது அலை பற்­றிய கணிப்­பு­கள் வெளி­யி­டப்­பட்­டன.

ஐஐடி கான்­பூர் ஆராய்ச்­சி­யா­ளர்­கள் இது­கு­றித்து வெளி­யிட்­டுள்ள அறி­விப்­பில், இந்­தி­யா­வில் கொரோனா 4வது அலை­யா­னது வரு­கிற ஜூன் 22ஆம் தேதி தொடங்கி அக்­டோ­ட­பர் 24ஆம் தேதி வரை நீடிக்­கும் என தெரி­வித்­த­னர்.

4வது கிரு­மித்­தொற்று அலை தோன்­று­வ­தற்­கான சாத்­தி­யங்­கள் பற்றி நிபு­ணர்­கள் கூறி வரும் சூழ­லில், இந்­தி­யா­வில் ஓமிக்­ரான் அச்­சு­றுத்­தல் இன்­னும் நீங்­கி­வி­ட­வில்லை என்று மத்­திய அரசு எச்­ச­ரிக்கை விடுத்­துள்­ளது.

மத்­திய சுகா­தார அமைச்சின் இணைச் செய­லா­ளர் லவ் அகர்­வால் கூறு­கை­யில், "உல­கம் முழு

­வ­தும் 99 நாடு­க­ளுக்கு கொரோனா தடுப்­பூ­சி­களை நாம் வழங்கி இருக்­கி­றோம்.

"145 நாட்­களில் 25 கோடி தடுப்­பூ­சி­க­ளைச் செலுத்தி முடித்­துள்­ளோம்.

"இது­வரை 181 கோடி தடுப்­

பூ­சி­கள் போடப்­பட்­டுள்­ளன என்­

ப­தைத் தெரி­விப்­ப­தில் பெருமை கொள்­கி­றேன். எனி­னும், ஓமிக்­ரான் அச்­சு­றுத்­தல் நாட்­டில் இருந்து நீங்கிவிட­வில்லை," என்­றார்.