சீன வெளியுறவு அமைச்சர் வாங் யி இந்தியா வருகிறார்

சீன வெளியுறவு அமைச்சர் வாங் யி இந்தியா வருகிறார்

1 mins read
38396347-68f1-4e69-9f38-dc76cefbd28a
சீன வெளியுறவு அமைச்சர் வாங் யி. கோப்புப் படம்: ஏஎஃப்பி -

புதுெடல்லி: சீன வெளி­யு­றவு அமைச்­சர் வாங் யி இம்­மா­தம் 25ஆம் தேதி (நாளை) இந்­தியா வரு­கி­றார் என நம்­ப­க­மான வட்­டா­ரங்­கள் தெரி­விக்­கின்­றன.

கடந்த 2020ல் எல்­லை­யில் இரு நாடு­க­ளுக்­கும் இடையே கடுமை யான மோதல் ஏற்­பட்­டது. இதை யடுத்து இரு தரப்பு உற­வில் விரி சல் ஏற்­பட்­டது. ஆனால் தற்­போது அமை­தி­யான சூழல் நில­வு­கிறது.

இந்த நிலை­யில் திரு வாங் யி இந்­தி­யா­வுக்கு வரு­கை­ய­ளிப் பதாக அவ­ரது வரு­கையை நன்கு அறிந்த வட்­டா­ரம் தெரி­வித்­துள்­ளது.

இந்­தி­யா­வின் பாது­காப்பு ஆலோ­ச­க­ரான அஜித் டோவல், வெளி­யு­றவு அமைச்­சர் ஜெய்­சங்­கர் ஆகி­யோரை அவர் சந்­திப்­பார் என்று அந்த வட்­டா­ரத்­தின் அதி காரி ஒரு­வர் கூறி­னார்.

உக்­ரேன் மீது ரஷ்­யா­வின் படை­யெ­டுப்பு மற்­றும் எல்­லைப் பிரச்­சினை குறித்து அவர்­கள் பேச­லாம் என்­றும் அவர் தெரிவித்­தார்.

இந்தியாவும் சீனாவும் எல்லைப் பிரச்சினையை சுமூகமாகத் தீர்த்துக் கொள்ள தொடர்ந்து முயற்சி செய்வதாகவும் அந்த அதிகாரி கூறினார்.

ஆனால் திரு வாங் யியின் வருகையை இந்தியாவோ சீனாவோ நேற்று மாலை வரை அதிகாரபூர்வ மாக உறுதிப்படுத்தவில்லை.

உக்ரேன் மீது ரஷ்யா படை யெடுத்ததை இந்தியாவும் சீனாவும் ஆதரிக்கவில்லை. அதே சமயத் தில் இரு நாடுகளும் ரஷ்யாவை இதுவரை கண்டிக்கவில்லை.