புதுடெல்லி: இந்தியாவில் ஏற்கெனவே கொவிஷீல்ட், கோவேக்சின், ஸ்புட்னிக் ஆகிய தடுப்பூசிகள் கொேரானாவுக்கு எதிராக பயன் படுத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
ஆனால் தடுப்பூசிக்கான தேவை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக மேலும் சில தடுப்பூசிகளுக்கு இந்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது. தற்போது 12 முதல் 17 வயதுக்கு உட்பட்டவர்களுக்கும் தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. இந்த நிலையில் இந்த வயதில் உள்ளவர்களுக்கு நோவாவேக்ஸ் தடுப்பூசியை ேபாட இந்திய அரசு அனுமதி வழங்கியிருக்கிறது.
அவசரகால பயன்பாட்டை கருத்தில் கொண்டு மத்திய அரசு இந்த அனுமதியை வழங்கியுள்ளது.
வெளிநாட்டில் கண்டுபிடிக்கப் பட்ட இந்தத் தடுப்பூசியை இந்தியாவில் உள்ள சீரம் இன்ஸ்டிடியூட் தயாரித்து விநியோகிக்கும் உரிமையைப் பெற்றுள்ளது.
இதற்கு முன்பு நோவாவேக்ஸ் தடுப்பூசி பல்வேறு கட்டங்களாக ஆய்வு செய்யப்பட்டது.
பன்னிரண்டு முதல் 17 வயதுக்குஉட்பட்டவர்களுக்கு 'நோவாவேக்ஸ்' செலுத்தி நடத்தப்பட்ட ஆய்வில் 80 விழுக்காடு வெற்றி கிடைத்தது.
இதையடுத்து சிறார்களுக்கு நோவாவேக்ஸ் தடுப்பூசியை போட மத்திய அரசு அவசரகால அனுமதி வழங்கியுள்ளது.
பன்னிரண்டு வயதுக்கு மேல் தடுப்பூசி போட மூன்று தடுப்பூசி களுக்கு அனுமதி வழங்கப்பட்டு உள்ளது.
பயோலாஜிகல் இ'ஸ் கோர்பிவேக்ஸ், ஸைடஸ் கேடில்லாவின் ஸைகோவி-டி, பாரத் பயோடெக்கின் கோவேக்ஸின் ஆகியவை அவை.
நோவாவேக்ஸ் அனுமதி பெற்று உள்ள நான்காவது தடுப்பூசி ஆகும்.

