ஹைதராபாத்: தெலுங்கானாவில் உள்ள ஹைதராபாத் நகரில் நிகழ்ந்த மிக மோசமான தீ விபத்தில் பீகார் மாநிலத்தைச் சேர்ந்த தொழிலாளர்கள் உடல் கருகி மாண்டனர். போய்குடா பகுதியில் உள்ள ஒரு கடையின் மரக்கிடங்கில் நேற்று அதிகாலை 4 மணியளவில் தீ விபத்து ஏற்பட்டது.
இந்த கடையின் கிடங்கில் எளிதில் தீப்பற்றக்கூடிய பொருட்கள் நிறைய இருந்ததாகக் கூறப்படுகிறது. இதனால் தீ மளமளவென பரவியது.
அதே கடையில் வேலை செய்து வரும் பீகார் மாநில தொழிலாளர்கள் 12 பேர் கிடங்கில் தங்கி வந்தனர்.
அதிகாலையாக இருந்ததால் தொழிலாளர்கள் 12 பேரும் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தனர். இதனால் தீ மூண்டதை அவர்கள் உணர வில்லை.
தீ பரவிய வேகத்தில் தொழிலாளர்கள் 11 பேரும் உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்தனர்.
கடுமையான தீக்காயங்களுடன் ஒரு தொழிலாளி உயிருடன் மீட்கப் பட்டார்.
அவர் சன்னல் வழியாக வெளி யேறி தப்பியதாகக் கூறப்படு கிறது. காந்தி மருத்துவமனையில் ேசர்க்கப் பட்டுள்ள அவரது உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளது.
தீ விபத்து குறித்து தகவலறிந்து அங்கு வந்த தீயணைப்பு மற்றும் மீட்புக்குழுவினர் விரைந்து செயல்பட்டு மீட்புப்பணியில் ஈடுபட்டனர். சரக்குக் கிடங்கில் ஏற்பட்ட மின் கசிவு தீ விபத்துக்கு காரணமாக இருக்கலாம் என நம்பப்படுகிறது.
இதற்கிடையே விபத்தில் 11 தொழிலாளர்கள் உயிரிழந்த சம்பவத்துக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.
"ஹைதராபாத்தில் உள்ள போய்குடாவில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 11 பேர் உயிர் இழந்தது வேதனை அளிக்கிறது. துயரமான இந்தத் தருணத்தில் என் எண்ணமும் மனமும் உயிரிழந்தவர்களை பிரிந்து வாடும் குடும்பங்களுடன் உள்ளது.
"இறந்தவர்களின் குடும்பத்துக்கு பிரதமர் தேசிய நிவாரண நிதியிலிருந்து தலா ரூ.2 லட்சம் கருணைத் தொகையாக வழங்கப்படும்" என்று பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ், விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு தலா ரூ.5 லட்சம் நிவாரணத் தொகை வழங்க உத்தரவிட்டுள்ளார்.

