'வன்முறையின் பின்னணியில் முக்கிய காரணம் உள்ளது'

'வன்முறையின் பின்னணியில் முக்கிய காரணம் உள்ளது'

2 mins read
8897c1d4-ce05-46a1-9bdc-bafd4ef85eac
-

மம்தா: என் இதயம் நொறுங்கிப் போனது; குற்றவாளிகள் தப்பமுடியாது

கோல்­கத்தா: மேற்­கு­வங்­கத்­தில் எண்மர் எரித்­துக் கொல்­லப்­பட்ட சம்­ப­வத்­தின் பின்­ன­ணி­யில் பெரிய கார­ணம் மறைந்­துள்­ள­தாகவும் கலவ­ரத்தை தூண்­டு­வ­தில் தோல்வி கண்­ட­வர்­கள் இவ்­வாறு கொடூ­ரச் செய­லில் ஈடு­பட்­டுள்­ள­தா­க­வும் அம்மா­நில முதல்­வர் மம்தா பானர்ஜி தெரி­வித்­துள்­ளார்.

அதே­வே­ளை­யில் இந்­தச் சம்­ப­வத்தை நியா­யப்­ப­டுத்த விரும்­ப­வில்லை என்­றும் அவர் குறிப்­பிட்­டுள்­ளார்.

இந்­தக் கொடூ­ர சம்­ப­வம் நிகழ்ந்த பிர்பும் மாவட்­டத்­துக்கு நேரில் சென்ற முதல்­வர் மம்தா, நவீன மேற்கு வங்­கத்­தில் இத்தகைய சம்­ப­வம் நிக­ழும் எனத் தாம் சிறிதும் எதிர்­பார்க்­க­வில்லை என்­றார்.

மேற்­கு­வங்க மாநி­லம் பிர்­பும் மாவட்­டம் ராம்­பு­ராட் பகு­தி­யில் திரி­ணா­மூல் காங்­கி­ரஸ் கட்­சி­யின் பஞ்­சா­யத்து தலை­வர் பாது­ஷேக் என்­ப­வர் திங்­கட்­கி­ழமை இரவு மர்ம கும்­ப­லால் கொல்­லப்­பட்­டார்.

இதைத் தொடர்ந்து அந்தப் பகு­தி­யில் உள்ள போக்­டுய் என்ற கிரா­மத்­தில் வீடு­க­ளுக்குத் தீ வைக்­கப்­பட்­டது. இதில் எட்டு பேர் எரித்­துக் கொல்­லப்பட்­ட­னர்.

"நடந்த சம்­ப­வத்தை என்­னால் நம்ப முடி­ய­வில்லை. உங்­கள் குடும்­பத்­தாரை இழந்து நிற்­கி­றீர்­கள்.

"தாய்­மார்­களும் குழந்­தை­களும் கொல்­லப்­பட்­டுள்­ள­னர். எனது இத­யம் நொறுங்­கிப் போயுள்­ளது," என்று இறந்­த­வர்­களின் குடும்­பத்­தார், உற­வி­னர்­கள், கிராம மக்­கள் மத்­தி­யில் முதல்வர் மம்தா குறிப்­பிட்­டார்.

இந்­தப் படு­கொ­லைச் சம்­ப­வம் தொடர்­பாக காவல்­துறை அனைத்து கோணங்­க­ளி­லும் விசா­ரணை மேற்­கொள்­ளும் என்று உறு­தி­ய­ளித்த முதல்­வர் மம்தா, குற்­ற­வா­ளி­கள் மீது கடும் நட­வ­டிக்கை எடுக்­கப்­படும் என்­றார்.

சம்­பவ இடத்­துக்கு காவல்­துறை உய­ர­தி­கா­ரியை வர­வ­ழைத்த அவர், பொது­மக்­க­ளின் புகார்­க­ளின் பேரில் நட­வ­டிக்கை எடுக்­கா­மல் அலட்­சி­ய­மாக இருந்த காவல்­து­றை­யி­னர் தண்­டிக்­கப்­பட வேண்­டும் என்­றார்.

"குற்­றச்­செ­ய­லில் ஈடு­பட்டவர்கள் தப்­பி­விட்­ட­தா­கக் கார­ணம் கூறாதீர்­கள். குற்­ற­வா­ளி­கள் கைது செய்­யப்­பட வேண்­டும். சாட்­சி­கள் மீது தாக்­கு­தல் நடத்­தப்­ப­ட­லாம் என்ப­தால் உரிய பாது­காப்பு வழங்­கப்­பட வேண்­டும்," என முதல்­வர் மம்தா உத்­த­ர­விட்­டார்.

இத­னி­டையே, பிர்­பும் கல­வ­ரம் தொடர்­பாக கோல்­கத்தா உயர் நீதி­மன்­றம் தானாக முன்­வந்து வழக்கை விசா­ர­ணைக்கு எடுத்துக் கொண்­டது. கல­வ­ரம் நடந்த இடத்­தில் மாவட்ட நீதி­பதி முன்­னி­லை­யில், 24 மணி நேர­மும் கண்­கா­ணிக்­கும் வகை­யில் கண்­கா­ணிப்பு கேம­ராக்­கள் பொருத்த வேண்­டும் என்று நீதி­ப­தி­கள் உத்­த­ர­விட்­ட­னர்.

இதற்­கி­டையே, பிர்­பும் சம்­ப­வத்­து­டன் தொடர்­பு­டைய குற்­ற­வா­ளி­களை மன்­னிக்­கக் கூடாது எனப் பிர­த­மர் மோடி தெரி­வித்­துள்­ளார்.

குற்­ற­வா­ளி­களைக் கைது செய்ய மேற்கு வங்க அர­சுக்குத் தேவை­யான உத­வி­களை வழங்க மத்­திய அரசு தயார் என்­றும் அவர் கூறி­யுள்­ளார். பெண்­களும் குழந்­தை­களும் உயி­ரு­டன் எரிக்­கப்­ப­டு­வதைவிட ஜன­நா­ய­கத்­தில் வேதனை தரக்­கூ­டியது வேறு எது­வும் இருக்க முடி­யாது என மேற்கு வங்க ஆளுநர் ஜக்­தீப் தன்­கர் கூறினார்.

இறந்தவர்கள் குடும்பத்துக்கு இரண்டு லட்சம் ரூபாய் நிவாரணம் அறிவித்துள்ளார் முதல்வர் மம்தா.