தைரியமாக தேர்தலை நடத்த பாஜகவுக்கு கெஜ்ரிவால் அழைப்பு

தைரியமாக தேர்தலை நடத்த பாஜகவுக்கு கெஜ்ரிவால் அழைப்பு

1 mins read
c4a0b6f7-9e57-4703-9e58-ec2e5c95a795
-

புது­டெல்லி: பாஜ­க­வுக்கு தோல்விப் பயம் ஏற்­பட்­டுள்­ள­தாக டெல்லி முதல்­வர் அர­விந்த் கெஜ்­ரி­வால் தெரி­வித்­துள்­ளார்.

இந்­தப் பயம் கார­ண­மா­கவே டெல்லி மாந­க­ராட்­சித் தேர்­தலை ஒத்திவைக்க அக்­கட்சி முயற்சி செய்­வ­தாக அவர் தமது டுவிட்­டர் பதி­வில் குறிப்­பிட்­டுள்­ளார். மேலும், பாஜக தலை­மைக்கு டெல்லி முதல்வர் சவா­லும் விடுத்­துள்­ளார்.

டெல்லி மாந­க­ராட்சி தேர்­தலை உரிய நேரத்­தில் நடத்தி, பாஜக வெற்றி பெறும் பட்­சத்­தில் ஆம் ஆத்மி கட்­சி­யி­னர் அர­சி­யலை விட்டு வெளி­யே­று­வார்­கள் என்று கெஜ்­ரி­வால் கூறி­யுள்­ளார்.

உல­கின் மிகப்­பெ­ரிய அர­சி­யல் கட்சி என்று பாஜக தன்­னைப் பற்றி பெரு­மை­யா­கக் கூறிக்­கொள்­வ­தா­க­வும் அப்­ப­டிப்­பட்ட கட்சி ஆம் ஆத்மி போன்ற சிறிய கட்­சியை, சிறிய தேர்­தலை எதிர்­கொள்ள அஞ்­சு­கிறது என்­றும் முதல்­வர் கெஜ்­ரி­வால் விமர்­சித்­துள்­ளார்.

சரி­யான நேரத்­தில் மாந­க­ராட்சித் தேர்­தல் நடத்த பாஜ­க­வுக்கு தாம் தைரி­ய­மூட்­டு­வ­தா­க­வும் அவர் தமது பதி­வில் குறிப்­பிட்­டுள்­ளார்.

"தோல்விப் பயத்­தில் இன்று டெல்லி மாந­க­ராட்சி தேர்­தலை ஒத்தி ­வைக்­கி­றார்­கள். நாளை மாநிலத் தேர்­தல்­கள், பின்­னர் நாட்­டின் பொதுத் தேர்­த­லை­யும் ஒத்­தி­வைப்­பார்­கள்," என்று முதல்­வர் கெஜ்ரி­வால் மேலும் தெரி­வித்­துள்­ளார்.