ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரில் அமைந்துள்ள ஆசியாவின் மிகப்பெரிய துலிப் மலர்த் தோட்டம் நேற்று முன்தினம் பார்வையாளர்களுக்குத் திறக்கப்பட்டது.
ஸ்ரீநகரில், தால் ஏரியை ஒட்டி அமைந்துள்ளது இந்திரா காந்தி நினைவு துலிப் மலர்த் தோட்டம்.
நூற்றுக்கணக்கான ஏக்கர் பரப்பளவில் பரந்து விரிந்துள்ள இத்தோட்டத்தில் பல வண்ணங்களில் ஒரு மில்லியனுக்கும் மேற்பட்ட துலிப் மலர்கள் வளர்க்கப்படுகின்றன.
ஆண்டுதோறும் வசந்த காலத்தில் இங்கு துலிப் திருவிழா நடைபெறும். அதில் உலகம் முழுவதிலும் இருந்து ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வருகை தருவர்.

