தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

'கணவர் நிகழ்த்தினாலும் பாலியல் வன்கொடுமைதான்'

2 mins read
0cdca00a-dac4-405a-b1b1-b21d8b32b03d
-

பெங்­க­ளூரு: மனை­வி­யின் விருப்­பத்­துக்கு எதி­ராக, கண­வ­னால் வலுக்­கட்­டா­ய­மாக பாலி­யல் துன்­பு­றுத்­த­லுக்கு ஆளா­கும்­போது, அதனை பாலி­யல் வன்­கொ­டுமை என கூற­லாம் என்று கர்­நா­டக உயர் நீதி­மன்­றம் தெரி­வித்­துள்­ளது.

கண­வ­னின் செய­லால் அப்­பெண் மன­த­ள­வில் கடும் பாதிப்பை எதிர்­கொள்­வ­தா­க­வும் கண­வர்­மாரின் இத்­த­கைய செயல்­கள் மனை­வி­க­ளின் ஆன்மாவைக் காயப்­ப­டுத்­து­கிறது என்­றும் உயர் நீதி­மன்ற நீதி­பதி நாக­பி­ர­சன்னா குறிப்­பிட்­டார்.

கண­வர் தம்மை பாலி­யல் வன்­கொ­டுமை செய்­த­தாக மனைவி அளித்த புகார், கர்­நா­டக உயர் நீதி­மன்­றத்­தில் நேற்று முன்­தினம் விசா­ர­ணைக்கு வந்­தது. அப்­போது, கண­வ­ருக்கு எதி­ராகத் தாக்­கல் செய்­யப்­பட்ட குற்­றச்­சாட்­டு­களை ரத்து செய்ய நீதி­பதி மறுத்­தார்.

கண­வன் என்­றால் மனை­வியை ஆட்சி செய்­ப­வர்­கள் என்­பது பிற்­போக்­குத்­த­ன­மான எண்­ணம் என்­றும் மனை­வி­யின் விருப்­பம் இன்றி நிகழ்த்­தப்­படும் பாலி­யல் உற­வும்­கூட பாலி­யல் வன்­கொ­டு­மை­தான் என்­றும் நீதி­பதி நாக­பி­ர­சன்னா குறிப்­பிட்­டார்.

எனவே, கண­வர் மீதான பாலி­யல் குற்­றச்­சாட்டை உறுதி செய்து 'பாலி­யல் வன்­கொ­டுமை' என்ற பிரி­வின் கீழ் வழக்­குப்­ப­திவு செய்ய அவர் உத்­த­ர­விட்­டார்.

ஓர் ஆண் 18 வய­தைக் கடந்து­விட்ட தன் மனை­வி­யு­டன் உட­லு­றவு கொள்­வது பாலி­யல் வன்­கொடு­மை­யாகத் கரு­தப்­ப­ட­மாட்­டாது என சட்­டம் கூறு­கிறது.

கடந்த 2018ஆம் ஆண்டு, இதே­போன்ற ஒரு வழக்கு குஜ­ராத் உயர்­நீ­தி­மன்­றத்­தில் விசா­ர­ணைக்கு வந்­த­போது, மனைவி தாக்­கல் செய்த பாலி­யல் வன்­கொ­டுமை வழக்கை ரத்து செய்­யு­மாறு கண­வர் தரப்­பில் கோரப்­பட்­டது.

இதற்­கான சட்­டப்­பி­ரிவைக் கண­வர் தரப்பு சுட்­டிக்­காட்­டி­யதை அடுத்து, அவர் மீதான முதல் தக­வல் அறிக்­கையை உயர் நீதி­மன்­றம் ரத்து செய்­தது. எனி­னும், திரு­ம­ணம் என்­கிற பெய­ரில் பாலி­யல் வன்­கொ­டு­மை­யில் ஈடு­ப­டு­வோரை தண்­டிக்க வேண்­டிய அவ­சி­யத்­தை­யும் அப்­போது நீதி­ப­தி­கள் வலி­யு­றுத்­தி­னர்.

இந்­நி­லை­யில், திரு­ம­ணம் என்­பது ஆண்­க­ளுக்­குள் இருக்­கும் மிரு­கத்தை கட்­ட­விழ்த்து விடு­வதற்­கான சிறப்பு உரி­மை­யல்ல என்று கர்­நா­டக உயர் நீதி­மன்ற நீதி­பதி நாக­பி­ர­சன்னா தமது தீர்ப்­பில் குறிப்­பிட்­டுள்­ளார்.

எனவே, சட்­டம் இயற்­று­ப­வர்­கள் தற்­போது மௌனக் குரல்­க­ளை­யும் கேட்­டாக வேண்­டிய நிலைமை உள்­ளது என அவர் கூறி­யுள்­ளார்.