மேற்கு வங்காள வன்முறை: சிபிஐ விசாரணை

மேற்கு வங்காள வன்முறை: சிபிஐ விசாரணை

2 mins read
5086573a-b3ba-44a5-b451-e14e846ddc54
-

கோல்­கத்தா: இந்­தி­யா­வின் மேற்கு வங்­காள நக­ரில் எட்டுப் பேர் உயிருடன் எரித்து கொல்­லப்­பட்ட சம்­ப­வம் பற்றி சிபிஐ விசா­ரணை நடத்­தும் என்று கோல்­கத்தா உயர் நீதி­மன்­றம் உத்­த­ர­விட்­டது.

இதனை அடுத்து சிபிஐ குழு­வி­னர் நேற்று சம்­பவம் நிகழ்ந்த இடத்­திற்­குச் சென்­ற­னர். அங்கு பல தட­யங்­க­ளை­யும் அவர்­கள் சேக­ரித்­த­னர். எட்­டுப் பேரைக் கொண்ட அந்­தக்­ கு­ழு­வுக்­குக் காவல் துறை­யும் ஆத­ரவு அளித்­தது.

மேற்கு வங்­கா­ளத்­தில் ஆளும் கட்­சி­யைச் சேர்ந்த பாது ஷேய்க் என்­ப­வர் பீர்­பூம் மாவட்­டம் ராம்­பூர்­ஹாட், போக்­டுய் என்ற தன்­னு­டைய கிரா­மத்­தில் படு­கொலை செய்­யப்­பட்­டார். இதைத் தொடர்ந்து ஏற்­பட்ட வன்­மு­றை­யில் அடை­யா­ளம் தெரி­யாத நபர்­கள் அந்­தக் கிரா­மத்­தில் பல வீடு­க­ளுக்­கும் தீ வைத்து­விட்­ட­னர்.

இம்­மா­தம் 21ஆம் தேதி நிகழ்ந்த இந்­தச் சம்­ப­வத்­தில் எட்டுப் பேர் உயி­ரு­டன் எரிக்­கப்­பட்டு மாண்­டு­விட்­ட­னர். மாநி­லம் முழு­வ­தும் பெரும் கொந்­த­ளிப்பு கிளம்­பி­யதை அடுத்து கோல்­கத்தா உயர் நீதி­மன்­றம் தானா­கவே முன்­வந்து வழக்குப் பதிவு செய்து விசா­ரணை நடத்­தி­யது.

அந்­தச் சம்­ப­வம் பற்­றிய விசா­ரணையை சிபிஐ நடத்த வேண்­டும் என்று நேற்று உயர் நீதி­மன்­றம் உத்­த­ர­விட்­டது. அதோடு, ஏப்­ரல் 7ஆம் தேதிக்­குள் விசா­ரணை அறிக்கை தாக்­க­லாக வேண்­டும் என்­றும் சிபி­ஐக்கு உயர் நீதி­மன்­றம் உத்­த­ர­விட்டு இருக்­கிறது.

அந்தச் சம்­ப­வம் பற்றி இப்போது சிறப்புப் புல­னாய்வுக் குழு விசாரித்து வரு­கிறது. நீதி­மன்­ற உத்­த­ரவை அடுத்து இதை இனி சிபிஐ விசாரிக்­கும். இந்தத் தீர்ப்பு மேற்கு வங்­காள ஆளும் கட்­சி­யான திரி­ணா­முல் காங்­கி­ர­சுக்கு ஒரு பின்­ன­டைவு என்று தக­வல்­கள் கூறின.