திருப்பதி: திருப்பதியில் உடற்பயிற்சிக்கூடம் அமைப்பதற்காக இரண்டு வீடுகளில் ரூ. 70லட்சம் மதிப்புள்ள நகை, வெள்ளிப் பாத்திரங்கள், பணத்தைக் கொள்ளை அடித்த ஆடவர் அதிகாரிகளிடம் சிக்கினார்.
சுரேஷ் என்ற அந்த ஆடவரின் வீட்டில் இருந்து 1.610 கிலோ கிராம் தங்க நகைகள், 13 கிலோ வெள்ளிப் பொருள்கள், ரூ. 5 லட்சம் பணம் ஆகியவற்றை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
திருப்பதி அருகே இருக்கும் ஐராலா என்ற ஊரில் உள்ள ஒரு வீட்டில் ஆகஸ்ட் 15ஆம் தேதியும் இம்மாதம் 13ஆம் தேதி வேறு ஒரு வீட்டிலும் சுரேஷ் திருடி இருக்கிறார் என்று அதிகாரிகள் கூறினர்.
பல கோணங்களில் விசாரணை செய்த காவல்துறை சுரேஷ்தான் திருடன் என்பதை முடிவு செய்தது. அவரிடம் மேலும் விசாரணை நடக்கிறது.
அந்த இரண்டு வீடுகளிலும் சுரேஷ் நண்பரைப் போல நடித்து தன்னை பழக்கப்படுத்திக்கொண்டு பிறகு வீடுகளில் யாரும் இல்லாத போது கதவை உடைத்து திருடி இருக்கிறார் என்று நம்பப்படுகிறது.

