புதுடெல்லி: பொருளியல் நெருக்கடியில் சிக்கியுள்ள இலங்கைக்கு 40,000 டன் டீசல் எண்ணெய்யை இந்தியா அனுப்பி வைக்கும். இதன் தொடர்பில் இலங்கை விடுத்த வேண்டுகோளை இந்தியா ஏற்றுக்கொண்டு இருக்கிறது.
இலங்கைக்கு US$500 மில்லியன் கடன் வசதியை இந்தியா ஏற்படுத்திக்கொடுத்து இருக்கிறது. இதன் கீழ் மாதாமாதம் இந்தியா எரிபொருளை இலங்கைக்கு விநியோகிக்கிறது.
அதற்கும் மேலாக அவசரமாக இந்த அளவுக்கு டீசல் எண்ணெய் இலங்கைக்குக் கொடுக்கப்படும் என்று இந்திய தரப்பில் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.

