புதுடெல்லி: இந்தியாவில் இந்தாண்டு இறுதியில் 5ஜி தொலைத்தொடர்புச் சேவைகள் அறிமுகப்படுத்தப்படும் என்று நேற்று மத்திய அரசு அறிவித்தது.
மாநிலங்களவையில் பேசிய மத்திய தொலைத் தொடர்புத்துறை இணையமைச்சர் தேவுசின் சவுகான் அந்தத் தகவலை வெளியிட்டார்.
அரசாங்கத்தின் பிஎஸ்என்எல் தொலைத்தொடர்பு நிறுவனம் கம்பி இணைப்பு இல்லாத 4ஜி சேவையை விரைவில் தொடங்கும் எனவும் மத்திய அமைச்சர் தெரிவித்தார்.

