சிபிஐ விசாரணை: மாநில அரசுகள் ஆதரவில்லை; ரூ.21,000 கோடி மோசடிக்கும் அதேநிலைதான்

சிபிஐ விசாரணை: மாநில அரசுகள் ஆதரவில்லை; ரூ.21,000 கோடி மோசடிக்கும் அதேநிலைதான்

1 mins read
5ec29f78-2baa-4599-a512-c0c3fb9bf066
-

புது­டெல்லி: இந்­தி­யா­வில் குற்றவியல் புலன்­வி­சா­ரணை அமைப்­பான சிபிஐ விசா­ர­ணை நடத்த பல மாநில அர­சு­களும் ஒத்­து­ழைப்பு அளிப்­ப­தில்லை என்று மத்­திய ஊழியர் நலத்­துறை இணை அமைச்­சர் ஜிதேந்­திர சிங் நாடாளு மன்ற மாநி­லங்­க­ளவையில் தெரி­வித்­தார்.

மிசோ­ரம், மேற்கு வங்­கா­ளம், சத்­திஸ்­கர், ராஜஸ்­தான், மராட்­டி­யம், கேரளா, ஜார்­க்கண்ட், பஞ்­சாப், மேகா­லயா ஆகிய ஒன்­பது மாநி­லங்­கள், தங்­கள் மாநி­லத்­தில் சிபிஐ விசா­ரணை நடத்­து­வ­தற்­கான பொது ஒப்­பு­த­லைத் திரும்­பப் பெற்­றுக்­கொண்­டு­விட்டதாக அவர் கூறினார். இந்­தி­யா­வில் மகா­ராஷ்­டிரா, பஞ்­சாப், சத்­திஸ்­கர், மேற்கு வங்­கா­ளம், ராஜஸ்­தான், ஆகிய 5 மாநி­லங்­களில் பாஜக அல்­லாத அர­சு­கள் ஆட்சி நடக்­கிறது.

இந்த மாநி­லங்­களில் ரூ.21,000 கோடி மதிப்­புள்ள வங்கி மோசடிகள் நடந்­துள்­ள­தாக பல்வேறு புகார்­கள் தாக்­க­லாகி உள்­ளன.

ஆனா­லும் அந்த வழக்­கு­க­ளைப் பற்றி சிபிஐ விசா­ரிக்க அந்த ஐந்து மாநில அர­சு­களும் இது­வரை ஒப்பு­தல் அளிக்­க­வில்லை என்று அமைச்­சர் தெரிவித்தார்.

கடந்த மூன்று ஆண்­டு­களில் மொத்­தம் 128 வேண்­டு­கோள் கடி­தங்­கள் அனுப்பி கோரிக்கை விடுக்­கப்­பட்­ட­தா­க­வும் ஆனால் பதிலே இல்லை என்­றும் அவர் கூறி­ன­ார்.

மகா­ராஷ்­டிரா மாநில அர­சி­டம் மட்­டும் 101 வேண்­டு­கோள் கடி­தங்­கள் தாக்­க­லா­ன­தா­க­வும் இதுவரை ஒரு பதி­லும் இல்லை என்­றும் அவர் குறிப்பிட்டார்.

இத­னால், அந்த வழக்­கு­களில் சிபிஐ விசா­ர­ணை­யைத் தொடங்க முடி­யாத நிலை நில­வு­வ­தா­க­ அமைச்சர் வருத்­தம் தெரி­வித்­தார்.