நிர்மலா: எரிபொருள் விலை உயர உக்ரேன் போர் முக்கிய காரணம்

நிர்மலா: எரிபொருள் விலை உயர உக்ரேன் போர் முக்கிய காரணம்

2 mins read
c552cf32-71ff-4ffd-87cd-1546433239c2
-

புது­டெல்லி: நாடு முழு­வ­தும் பெட்­ரோல், டீசல் விலை ஐந்து நாள்களில் நான்காவது முறை­யாக அதி­க­ரித்­துள்­ளது. இந்­நி­லை­யில், எரி­பொ­ருள் விலை­யேற்­றத்­திற்கு உக்­ரேன் போர்ச் சூழ­லும் முக்­கிய கார­ணம் என்று மத்­திய நிதி­யமைச்­சர் நிர்­மலா சீதா­ரா­மன் (படம்) தெரி­வித்­துள்­ளார்.

2022ஆம் ஆண்­டுக்­கான நிதி மசோதா மக்­க­ள­வை­யில் நேற்று முன்­தி­னம் நிறை­வேற்­றப்­பட்­டது.

நிதி­நிலை அறிக்கை மீதான விவா­தத்­துக்­குப் பதி­ல­ளித்­துப் பேசிய நிர்­மலா சீதா­ரா­மன், எரி­பொ­ருள் விலை­யேற்­றத்­துக்­கும் ஐந்து மாநிலத் தேர்­த­லுக்­கும் எந்­த­விதத் தொடர்­பும் இல்லை என்­றார். ஆனால், எதிர்க்­கட்­சி­கள் மத்­திய அரசை இவ்­வாறு சாடி வந்­தன.

பொரு­ளா­தார மீட்­சிக்­கா­க­வும் கொரோனா பேரி­ட­ருக்­காக செல­விட்­ட­தற்­கா­க­வும் பல வளர்ந்த நாடு­க­ளும்­கூட வரி­களை உயர்த்தி உள்ள­தா­கக் குறிப்­பிட்ட அவர், மத்­திய அரசு அது போன்று வரி­கள் எதை­யும் உயர்த்­த­வில்லை என்­றார்.

மேலும், எளிய மக்­க­ளின் சுமையைக் குறைப்­ப­தில் அரசு உறு­தி­யாக உள்­ள­தா­க­வும் மக்­கள் மீது குறைந்த சுமையை மட்­டுமே அர­சாங்­கம் சுமத்­து­கிறது என்­றும் நிர்­மலா சீதா­ரா­மன் தெரி­வித்­தார்.

கடந்த 1951ஆம் ஆண்டு நாட்­டின் உண­வுப் பொருள் விலை உயர்வுக்கு கொரியா போரை அன்­றைய பிர­தமர் நேரு சுட்­டிக்­காட்டி­னார் என்­றும் 1970ஆம் ஆண்டு, மறைந்த பிர­த­மர் இந்­திரா காந்தி வரு­மான வரி விகி­தத்தை கடு­மை­யாக உயர்த்­தி­னார் என்­றும் நிர்­மலா சீதா­ரா­மன் தமது உரை­யில் குறிப்­பிட்­டார்.

"கடந்த 1951இல், கொரி­யா போர் இந்­தி­யா­வின் பண­வீக்­கத்தைப் பாதிக்­கும் என்று அன்­றைய பிர­த­மர் நேரு கூற­லாம். ஆனால், இன்­றைய உல­க­ம­ய­மாக்­கப்­பட்ட இணைக்­கப்­பட்ட உல­கில், உக்­ரேன் போர் இந்­தி­யா­வைப் பாதிக்­கிறது என்று நாங்­கள் சொன்னால் அதை ஏற்க எதிர்க்­கட்­சி­யி­னர் மறுக்­கி­றீர்­கள்.

"கூடு­தல் சுமையை நாங்­கள் கொண்டு வர­வில்லை. எண்­ணெய்ச் சந்தை நிறு­வ­னங்­கள் 15 நாள் சரா­ச­ரியை அதிக விலை­யில் கொள்­மு­தல் செய்­கின்­ற­ன­வெ­னில், அதை நாங்­கள்தான் தாங்­கிக்­கொள்ள வேண்­டும்," என்­றார் அமைச்­சர் நிர்­மலா சீதா­ரா­மன்.

உல­க­ள­வில் கச்சா எண்­ணெய் விநி­யோ­கச் சங்­கி­லியை உக்­ரேன் போர் சீர்­கு­லைத்­துள்­ள­தா­க­வும் அதன் தாக்­கம் அனைத்து நாடு­களி­லும் பெரி­தாக உள்­ளது என­வும் அவர் குறிப்­பிட்­டார்.

"பிர­த­மர் மோடி தலை­மை­யில், வரி­க­ளைக் குறைத்து, சாமா­னிய மக்­கள் மீதான சுமை­யைக் குறைக்க வேண்­டும் என்று ஓர் அர­சாங்­க­மாக நாங்­கள் செயல்­ப­டு­கி­றோம். அதை தொடர்ந்து வெற்­றி­க­ர­மா­கச் செய்து வரு­கி­றோம்," என்­றார் நிர்­மலா சீதா­ரா­மன்.

இதற்­கி­டையே நடப்பு மார்ச் 22 முதல் 26 வரை­யி­லான ஐந்து நாள்­களில் மட்­டும் பெட்­ரோல் விலை லிட்­ட­ருக்கு ரூ.3.20 அதி­க­ரித்­துள்­ளது. தலை­ந­கர் புது­டெல்­லி­யில் ஒரு லிட்­டர் ரூ.98.61க்கும் மும்­பை­யில் ஒரு லிட்­டர் ரூ.113.35க்கும் விற்­ப­னை­யா­ன­தாக ஊட­கத் தக­வல்­கள் தெரி­விக்­கின்­றன.

இதனால் தங்களின் சுமை தொடர்ந்து அதிகரித்து வருவதாக வாகனமோட்டிகள் கவலை தெரிவித்துள்ளனர்.

ஐந்து நாள்களில் நான்காவது முறையாக பெட்ரோல், டீசல் விலை உயர்வு