மேற்கு வங்க வன்முறை தொடர்பில் திரிணாமூல் காங்கிரஸ் பிரமுகர் கைது

மேற்கு வங்க வன்முறை தொடர்பில் திரிணாமூல் காங்கிரஸ் பிரமுகர் கைது

1 mins read
7cbfe978-25a8-45fc-9a49-ab83d0f44482
-

கோல்­கத்தா: மேற்­கு­வங்­கத்­தில் எண்­மர் கொடூ­ர­மாக எரித்­துக் கொல்­லப்­பட்ட வழக்கு சிபி­ஐக்கு மாற்­றப்­பட்ட நிலை­யில், இந்­தக் குற்­றத்­து­டன் தொடர்­பு­டைய திரி­ணா­மூல் காங்­கி­ரஸ் பிர­மு­கர் ஒரு­வர் கைதாகி உள்­ளார்.

அங்­குள்ள பிர்­பும் மாவட்­டம், ராம்­பு­ராட் பகு­தி­யில் நடந்த வன்­மு­றைச் சம்­ப­வங்­க­ளின்­போது உயி­ரி­ழந்­த­வர்­க­ளின் குடும்­பத்­தா­ருக்கு அறி­விக்­கப்­பட்ட இழப்­பீட்­டுத் தொகை ரூ.5 லட்­ச­மாக உயர்த்­தப்­பட்­டுள்­ளது.

கல­வ­ரம் தொடர்­பாக இது­வரை 23 பேர் கைது செய்­யப்­பட்­டுள்­ள­னர். எனி­னும், ராம்­பு­ராட் பகுதி திரி­ணா­மூல் காங்­கி­ரஸ் கட்­சித் தலை­வர் அன­ருல் ஹூசை­னுக்கு கல­வ­ரத்­தில் தொடர்­புள்­ள­தாக ஊட­கங்­களில் தக­வல் வெளி­யா­கின.

காவல்­துறை அவர் மீது நட­வ­டிக்கை எடுக்க தயங்­கு­வ­தா­க­வும் கூறப்­பட்­டது.

இந்­நி­லை­யில், அவ­ரைக் கைது செய்ய முதல்­வர் மம்தா பானர்ஜி உத்­த­ர­விட்­டார்.

உயி­ரி­ழந்த எட்டு பேரில் மூவர் பெண்­கள், இரு­வர் சிறார்­கள் ஆவர்.

இதைக் குறிப்­பிட்டு நேற்று முன்­தி­னம் மாநி­லங்­க­ள­வை­யில் பேசிய பாஜக எம்­பி­யும் திரைப்­பட நடி­கை­யு­மான ரூபா கங்­குலி, மேற்கு வங்­கத்­தில் மக்­கள் கொத்து கொத்­தாக கொலை செய்­யப்­ப­டு­வது சாதா­ர­ண­மாகிவிட்­டது என்று சாடி­னார்.

"நாம் எல்­லா­ரும் மனி­தர்­கள். கல்­ம­னம் கொண்ட அர­சி­யலை நாம் நடத்­த­வில்லை," என்­றார் ரூபா.

உணர்ச்­சி­பூர்­வ­மா­கப் பேசிய அவர் திடீ­ரென கதறி அழு­தார். அவரை மற்ற உறுப்­பி­னர்­கள் ஆசு­வா­சப்­ப­டுத்­தி­னர்.