கூகல் மீது இந்திய பத்திரிகை அதிபர்கள் சங்கம் புகார்

கூகல் மீது இந்திய பத்திரிகை அதிபர்கள் சங்கம் புகார்

1 mins read
901170f7-3249-4b34-9566-1814a5e21b51
-

புதுடெல்லி: இந்திய செய்தி ஊடகங்களுக்கு கூகல் போன்ற நிறுவனங்கள் உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என இந்திய பத்திரிகை அதிபர்கள் சங்கம் வலியுறுத்தி உள்ளது.

இந்­திய செய்தி ஊட­கங்­கள், தங்­கள் வாடிக்­கை­யா­ளர்­க­ளுக்­காக உரு­வாக்­கும் நாட்டு நடப்­பு­கள் தொடர்­பான செய்­தி­கள் இணை­யத்­த­ளங்­களில் மின்­னி­லக்க வடி­வத்­தில் கிடைப்­ப­தா­க­வும் கூகல் போன்ற தளங்­க­ளைப் பயன்­ப­டுத்தி, அந்­தச் செய்­தி­களை வாடிக்­கை­யா­ளர்­கள் அறிந்துகொள்­வ­தா­க­வும் அச்­சங்­கத்­தின் பொதுச் செய­லா­ளர் மேரி பால் தெரி­வித்­துள்­ளார்.

செய்­தி­களை உரு­வாக்க ஊட­கங்­கள் ஏரா­ள­மான பணத்தை முதலீடு செய்­யும் நிலை­யில், அவற்­றைப் பயன்­ப­டுத்­திக்­கொள்­ளும் கூகல் போன்ற நிறு­வ­னங்­கள் செய்­திக்­குரிய பணத்தை அளிப்­ப­தில்லை என அவர் குறிப்­பிட்­டுள்­ளார்.

இந்திய பத்திரிகை அதிபர்கள் சங்கத்தின் புகாரை ஆராய்ந்த இந்திய போட்டி ஆணையம், இதுகுறித்து விரிவான விசாரணை நடத்தி வருகிறது.