வெளிநாடு செல்லும் பயணிகளுக்கு 'பூஸ்டர்'

வெளிநாடு செல்லும் பயணிகளுக்கு 'பூஸ்டர்'

2 mins read
2d1fb99e-ecf5-4767-bcaf-271a52919a27
-

புது­டெல்லி: அனைத்­து­லக விமா­னச் சேவை மீண்­டும் தொடங்­கப்­பட்­டுள்­ளதை அடுத்து, வெளி­நாடு செல்­லும் பய­ணி­க­ளுக்கு கொரோனா பூஸ்­டர் ஊசி போடு­வது என மத்­திய அரசு முடிவு செய்­துள்­ள­தாக ஊட­கத் தகவல் தெரி­விக்­கிறது.

சுமார் இரண்டு ஆண்­டு­க­ளுக்­குப் பிறகு இந்­தி­யா­வில் நேற்று முதல் அனைத்­து­லக விமா­னச் சேவை­கள் மீண்­டும் தொடங்கி உள்­ளன.

இத­னால் வெளி­நா­டு­க­ளுக்குப் பய­ணம் மேற்­கொள்ள வேண்­டிய அவ­சி­யம் இருப்­ப­வர்­கள் நிம்­மதிப் பெரு­மூச்சு விட்­டுள்­ள­னர்.

எனி­னும், பல்­வேறு நாடுகளில் கொரோனா பூஸ்­டர் ஊசி போட்டுக்­கொண்­ட­வர்­கள் மட்­டுமே அனு­ம­திக்­கப்­ப­டு­கின்­ற­னர். ஆனால், இந்­தி­யா­வில் இன்­னும் கொரோனா பூஸ்­டர் ஊசி போடும் நட­வ­டிக்கை தொடங்­க­வில்லை.

இந்­நி­லை­யில், கல்வி, வேலை வாய்ப்பு, தொழில், அலு­வ­ல­கம் சார்ந்த கார­ணங்­களுக்காக ஏரா­ள­மா­னோர் பல்­வேறு நாடு­க­ளுக்­குச் செல்ல வேண்­டி­யுள்­ளது.

அவர்­களில் பூஸ்­டர் போட்டுக்­கொண்­ட­வர்­கள் மட்­டுமே பெரும்­பா­லான நாடு­க­ளுக்­குள் நுழைய முடி­யும் என்ற நிலை நில­வு­கிறது.

இந்­தி­யா­வில் கொரோனா தடுப்­பூசி போடும் நட­வ­டிக்கை பர­வ­லாக நீடித்து வரு­கிறது. இரண்டு தடுப்­பூ­சி­க­ளை­யும் போட்­டுக்­கொள்ளா­த­வர்­க­ளைத் தேடிப்பிடித்து தடுப்­பூசி போடும் நட­வ­டிக்­கையை மத்­திய, மாநில அர­சு­கள் மேற்­கொண்­டுள்­ளன.

இந்­நி­லை­யில், வெளி­நாடு செல்­பவர்­க­ளுக்கு பூஸ்­டர் ஊசி போடும் நட­வ­டிக்­கையை இயன்ற விரை­வில் தொடங்க வேண்­டும் என மத்­திய அர­சுக்கு சுகா­தார நிபு­ணர்­கள் ஆலோ­சனை வழங்கி உள்­ள­னர்.

அர­சாங்­கம் சார்­பில் நாடு முழு­வ­தும் பூஸ்­டர் ஊசி போடும் திட்­டத்தை உட­ன­டி­யா­கச் செயல்­படுத்த முடி­யாத பட்­சத்­தில், தனி­யார் மருத்­து­வ­ம­னை­கள் மூலம் பூஸ்­டர் ஊசி போடு­வ­தற்கு ஏற்­பாடு செய்­ய­லாம் என நிபு­ணர்­கள் ஆலோ­சனை வழங்கி உள்­ள­தா­கத் தெரி­கிறது.

மேலும், வெளி­நாடு செல்­வோர் தங்­கள் சொந்த செல­வில் பூஸ்­டர் ஊசி போட்­டுக்­கொள்­ளத் தயா­ராக இருப்­ப­தால் மிக விரை­வில் நட­வ­டிக்கை எடுப்­பது நல்­லது என நிபு­ணர்­கள் கூறி­யுள்­ள­னர்.

தனி­யார் மருத்­து­வ­ம­னை­களில் போடப்­படும் பூஸ்­டர் ஊசிக்­கான விலையை மத்­திய அரசே தீர்­மா­னிக்­கும் என எதிர்­பார்க்­கப்­ப­டு­கிறது.

முதல் கட்­ட­மாக, அடிக்­கடி பய­ணம் மேற்­கொள்­வோ­ருக்­கும் தொழில் நிமித்­தம் வெளி­நா­டு­களுக்குச் செல்­ப­வர்­க­ளுக்கும் பூஸ்­டர் ஊசி போடு­வ­தில் முன்­னு­ரிமை வழங்­கப்­படும் எனத் தெரி­கிறது. இது குறித்த அதி­கா­ர­பூர்வ அறி­விப்பு வெளி­யா­கக்­கூ­டும் என மத்­திய சுகா­தார அமைச்சு வட்­டாரத் தக­வல்­கள் தெரி­விக்­கின்­றன.

மத்திய அரசுக்கு சுகாதார நிபுணர்கள் அறிவுறுத்து