பள்ளத்தில் கவிழ்ந்த பேருந்து: ஏழு பேர் பலி

பள்ளத்தில் கவிழ்ந்த பேருந்து: ஏழு பேர் பலி

1 mins read
a73a9c6a-433c-43af-95ac-1bbdcdf6da08
-

அம­ரா­வதி: திரு­மண நிச்­ச­ய­தார்த்­தத்­துக்­குச் சென்ற பேருந்து ஐம்­பது அடி ஆழ­முள்ள பெரிய பள்­ளத்­தில் கவிழ்ந்து விபத்­துக்­குள்­ளா­ன­தில் ஏழு பேர் பலி­யா­கி­னர்.

மேலும் 45 பேர் படு­கா­யம் அடைந்து மருத்­து­வ­ம­னை­யில் சிகிச்சை பெற்று வரு­கின்­ற­னர்.

இந்த சோகச் சம்­ப­வம் ஆந்­திர மாநி­லத்­தில் நேற்று முன்­தி­னம் நிகழ்ந்­துள்­ளது.

அங்­குள்ள அனந்­த­பூர் மாவட்­டம் தர்­மா­வ­ரத்­தில் இருந்து சித்­தூர் மாவட்­டம் நகரி அருகே உள்ள கிரா­மத்­தில் திரு­மண நிச்­ச­ய­தார்த்­தம் நடை­பெற இருந்­தது.

இதில் பங்­கேற்க ஐம்­ப­துக்­கும் மேற்­பட்­ட­வர்­கள் தனி­யார் பேருந்­தில் சென்றுகொண்­டி­ருந்­த­னர். நேற்று முன்­தி­னம் இரவு சுமார் 11.30 மணி­ய­ள­வில் பாக்­க­ராப்­பேட்டை மலைப்­பா­தை­யில் சென்­ற­போது அதிக வேகம் கார­ண­மாக ஓட்­டு­ந­ரின் கட்­டுப்­பாட்டை இழந்த அப்­பே­ருந்து சாலை­யோ­ரப் பள்­ளத்­தில் கவிழ்ந்­தது.

இதில் சம்பவ இடத்திலேயே ஏழு பேர் பலியாகினர். கும்மிருட்டில் விபத்தில் சிக்கியவர்களின் அழுகுரலை வைத்தே அவர்கள் இருக்கும் இடத்தை உத்தேசமாகக் கணக்கிட்டு மீட்புக் குழுவினர் 45 பேரை மீட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். காயம் அடைந்தவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.