'பிறர் சோகத்தை வைத்து சம்பாதிக்கும் பாஜக'

'பிறர் சோகத்தை வைத்து சம்பாதிக்கும் பாஜக'

2 mins read
4dee7760-a702-48f4-ad5d-63f4f04b18dd
-

புது­டெல்லி: பாஜக ஆட்­சிக்கு வந்த பிறகு எத்­தனை பண்­டிட்­டு­களை பாஜக காஷ்­மீ­ரில் மறு குடி­ய­மர்த்­தி­யுள்­ளது என்று டெல்லி முதல்­வர் அர­விந்த் கெஜ்­ரி­வால் (படம்) கேள்வி எழுப்­பி­யுள்­ளார்.

"தி காஷ்­மீர் ஃபைல்ஸ்" திரைப்­படத்­தின் மூலம் பாஜக சுமார் 200 கோடி ரூபாய் சம்­பா­தித்­துள்­ளது என்­றும் ஒரு­வ­ரது சோகத்தை வைத்து பணம் சம்­பா­திப்­பது குற்­றச்­செ­யல் என்­றும் அவர் காட்­டத்­து­டன் கூறி­யுள்­ளார்.

பாஜ­க­வின் இத்­த­கைய செயல்­பாட்டை நாடு பொறுத்­துக்­கொள்­ளாது என்­றார் அவர்.

'தி காஷ்­மீர் ஃபைல்ஸ்' படம் பெரும் சர்ச்­சையை ஏற்­ப­டுத்தி உள்­ளது. இப்­ப­டத்தை பாஜ­க­வி­னர் வர­வேற்­றுள்­ள­னர்.

காஷ்­மீ­ரில் இருந்த பண்­டிட் இன மக்­கள் அங்­கி­ருந்து வலுக்­கட்­டா­ய­மாக வெளி­யேற்­றப்­பட்­டதை இந்­தப் படம் சித்­தி­ரிப்­ப­தற்­காக பாஜ­க­வி­னர் கூறு­கின்­ற­னர்.

கடந்த காங்­கி­ரஸ் ஆட்­சிக் காலத்­தில் காஷ்­மீ­ரில் பயங்­க­ர­வா­தம் எப்­படி வளர்ந்­தது என்­பதை அறிய இந்­தப் படத்தை அனை­வ­ரும் பார்க்க வேண்­டும் என மத்­திய உள்­துறை அமைச்­சர் அமித் ஷா கூறி­யுள்­ளார்.

இந்­நி­லை­யில், இப்­ப­டம் குறித்து ஆம் ஆத்மி தலைமை ஒருங்­கிணைப்­பா­ள­ரு­மான கெஜ்­ரி­வால் கருத்து தெர­வித்­துள்­ளார்.

"கடந்த 25 ஆண்­டு­களில், காஷ்­மீரி பண்­டிட்­டு­கள் வெளி­யே­றி­ய­தில் இருந்து, கடந்த 8 ஆண்­டு­கள் உட்­பட 13 ஆண்­டு­க­ளாக மத்­தி­யில் பாஜக அரசு உள்­ளது. இந்த கால­கட்­டத்­தில் எத்­தனை காஷ்­மீரி பண்­டிட்­டு­க­ளின் குடும்­பங்­களை பாஜக அங்கு மறு குடி­ய­மர்த்­தி­யுள்­ளது?

"ஒரு குடும்­பம்­கூட காஷ்­மீருக்குத் திரும்­ப­வில்லை. காஷ்­மீர் பண்­டிட்­டு­கள் தங்­கள் வீடு­க­ளுக்குத் திரும்­பு­வதை உறு­தி­செய்ய நட­வடிக்கை­கள் எடுக்­கப்­பட வேண்­டும்," என்று முதல்­வர் கெஜ்­ரி­வால் மேலும் தெரி­வித்­துள்­ளார்.

காஷ்மீர் பண்டிட்டுகளின் நிலையை நாடு முழுவதும் மக்கள் புரிந்துகொள்ளும் வகையில் இந்தப் படத்தை இணையத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும் என்றும் அதன் மூலம் கிடைக்கும் பணத்தை பண்டிட்டுகளின் நலனுக்காகச் செலவிட வேண்டும் என்றும் வலியுறுத்தி உள்ளார்.