நிதியமைச்சர்: வங்கிக் கடன் பெற்று ஏமாற்றியோர் மீது கடும் நடவடிக்கை

நிதியமைச்சர்: வங்கிக் கடன் பெற்று ஏமாற்றியோர் மீது கடும் நடவடிக்கை

1 mins read
bf120fc3-bb1e-40d5-ad0c-30b641a46d22
-

புது­டெல்லி: வங்­கி­களில் கடன் பெற்று ஏமாற்­றி­ய­வர்­கள் மீது நட­வ­டிக்கை எடுக்­கப்­பட்­டுள்­ள­தாக மத்­திய நிதி அமைச்­சர் நிர்­மலா சீதா­ரா­மன் தெரி­வித்­துள்­ளார்.

முந்­திய ஐக்­கிய முற்­போக்­குக் கூட்­டணி ஆட்­சி­யில் கடனை திருப்பிச் செலுத்­தா­த­வர்­க­ளி­டம் இருந்து பணம் திரும்ப பெறப்­ப­ட­வில்லை என்­றும் நாடா­ளு­மன்­றத்­தில் பேசும்­போது அவர் குறிப்­பிட்­டார்.

நாட்­டில் உள்ள பொதுத்­துறை வங்­கி­களில் கடன் பெற்ற பலர் அதை திருப்­பிச் செலுத்­தா­மல் ஏமாற்­றி­ய­தாக பல்­வேறு வழக்­கு­கள் பதி­வாகி உள்­ளன. கட­னைத் திருப்­பிச் செலுத்­தா­மல் வெளி­நாடு­க­ளுக்கு சிலர் தப்­பிச் சென்­றுள்­ள­னர். அவர்­கள் மீது நட­வ­டிக்கை எடுக்­கப்­பட்டு வரு­கிறது.

இந்­நி­லை­யில், இவ்­வாறு கட­னைத் திருப்­பிச் செலுத்­தா­த­வர்­கள் மீது மேற்­கொள்­ளப்­பட்­டுள்ள நட­வ­டிக்­கை­கள் குறித்து திமுக உறுப்­பி­னர் டி.ஆர்.பாலு கேள்வி எழுப்­பி­னார்.

அதற்­குப் பதி­ல­ளித்­துப் பேசிய நிதி­ய­மைச்­சர் நிர்­மலா சீதா­ரா­மன், கடன் பெற்று ஏமாற்­றி­ய­வர்­கள் மீது முதல் தக­வல் அறிக்கை பதிவு செய்­வது முதல் பல்­வேறு நட­வ­டிக்­கை­கள் மேற்­கொள்­ளப்­பட்டு வரு­வ­தா­கக் குறிப்­பிட்­டார்.

"பிர­த­மர் மோடி தலை­மை­யி­லான அர­சு­தான் முதன்­மு­றை­யாக வங்­கி­களில் கடன் பெற்று திரும்ப செலுத்­தா­த­வர்­க­ளி­டம் இருந்து பணத்தை வசூ­லித்­துள்­ளது.

"திரும்ப வராத கடன்­க­ளைத் தள்­ளு­படி செய்­வது என்­பது முழுமை­யான தள்­ளு­படி என்று அர்த்­த­மல்ல. வங்­கி­கள் ஒவ்­வொரு கடன்­கள் மீதும் நிலு­வைத் தொகையை வசூ­லித்து வரு­கின்­றன.

"பொதுத்­துறை வங்­கி­கள் கட­னைச் செலுத்­தா­த­வர்­க­ளி­டம் இருந்து சொத்­து­களை கைய­கப்­படுத்தி உள்­ளன. இது போன்ற நடவடிக்கைகள் தொடர்ந்து மேற்கொள்ளப்படும்," என்­றார் அமைச்சர் நிர்­மலா சீதா­ரா­மன்.