புதுடெல்லி: இந்தியாவில் தெருவில் வசிக்கும் 20,000 குழந்தைகள் அடையாளம் காணப்பட்டு, அவர்களுக்கு மறுவாழ்வு அளிக்கப்பட்டிருப்பதாக குழந்தைகளைப் பாதுகாக்கும் என்சிபிசிஆர் என்ற அமைப்பின் தலைவர் பிரியங்க் கனூங்கோ தெரிவித்துள்ளார்.
அவர் பிடிஐ செய்தி நிறுவனத்துக்கு அளித்துள்ள நேர்காணலில், "தெருவோரக் குழந்தைகள் நலனுக் காகவே 'பால் ஸ்வராஜ்' என்ற சமூக வலைத்தளத்தை மத்திய அரசு ஏற்படுத்தி உள்ளது. இத்தளத்தில் குழந்தைகள் பற்றிய தகவல்களைப் பதிவேற்றம் செய்ய லாம்; கண்காணிக்கலாம்; அவர்களது மறுவாழ்வுக்கான பணிகளையும் செய்யலாம்.
"இதுவரை சாலையோரம் வசித்த 20,000 குழந்தைகளுக்கு மறுவாழ்வு அளிக்கப்பட்டுள்ளது.
"இருப்பினும், பாதிக்கப்பட்ட குழந்தைகளைக் கண்டறிந்து மறுவாழ்வு தருவதில் மாநிலங்கள் திறம்படச் செயல்படவில்லை," என வும் கனூங்கோ குற்றம்சாட்டினார்.
குறிப்பாக, டெல்லியில் 1,800 குழந்தைகள் மட்டுமே மீட்கப்பட் டுள்ளனர் என்றும் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு 73,000 குழந்தைகள் டெல்லி தெருக்களில் வசிப்பதாக தங்களிடம் கூறப்பட்டதாகவும் கனூங்கோ கூறியுள்ளார்.
கிராமங்கள், சிற்றூர்களில் இருந்து ரயில் மூலம் பல குழந்தைகள் வீட்டைவிட்டு ஓடி வந்து பெரு நகரங்களை வந்தடைகின்றனர். மும்பை, கோல்கத்தா, டெல்லி, சென்னை, கான்பூர், ஹைதராபாத், பெங்களூரு போன்ற பெரிய நகரங்களில் தெருவில் வசிக்கும் குழந்தைகள் அதிகமாகக் காணப்படுகிறார்கள்.

