தாயகம் திரும்பிய மாணவர்களைச் சேர்த்துக்கொள்ள விருப்பம் ரஷ்யா: கூடுதல் கல்விக் கட்டணம் தேவையில்லை

தாயகம் திரும்பிய மாணவர்களைச் சேர்த்துக்கொள்ள விருப்பம் ரஷ்யா: கூடுதல் கல்விக் கட்டணம் தேவையில்லை

1 mins read
2784faf6-0838-4ef4-b9b2-5b8eb63c3edd
உக்ரேனில் உள்ள கார்கிவ் நகரில் இருந்து கர்நாடகாவுக்கு திரும்பிய மாணவர்கள். படம்: டெக்கான் ஹெரால்டு -

மாஸ்கோ: உக்­ரே­னில் இருந்து நாடு திரும்­பிய இந்­திய மாண­வர்­களைத் தங்­கள் நாட்டு பல்­க­லைக்­க­ழ­கங்­களில் சேர்த்­துக்­கொள்ள ரஷ்யா விருப்­பம் தெரி­வித்­துள்­ளது.

"மாண­வர்­கள் கல்­விக்­கட்­ட­ணம் எது­வும் கூடு­த­லா­கச் செலுத்­தத் ேதவை­யில்லை," என்­றும் அது மேலும் கூறி­யுள்­ளது.

ரஷ்­யா­வின் இந்த அறி­விப்­பால் தங்­கள் எதிர்­கா­லம் கேள்­விக்­குறி யாகி விட்­டது என்ற வருத்­தத்­தில் இருந்த மாண­வர்­க­ளுக்கு பேரு­தவி­யாக இருக்­கும் என­வும் கூறப் படு­கிறது.

உக்­ரேன் மீது ரஷ்யா தொடுத்து வரும் போர் கார­ண­மாக, அந்­நாட்­டில் இருந்து ஏரா­ள­மா­னோர் அண்டை நாடு­களில் அக­தி­க­ளாக தஞ்­சம் அடைந்­துள்­ள­னர்.

அத்­து­டன், உக்­ரே­னின் உயர்­கல்வி நிலை­யங்­களில் மருத்­து­வம், பொறி­யி­யல் உள்­ளிட்ட பிரி­வு­களில் பயின்று வந்த 20,000க்கும் ேமற்­பட்ட இந்­திய மாண­வர்­க­ளை­யும் மத்­திய அரசு மீட்­டுள்­ளது.

இவர்­களில் பெரும்­பா­லா­னோர் தங்­க­ளது எதிர்­கா­லம் கேள்­விக்­கு­றி­யா­னதால், தங்களது கல்­வியை இந்­தி­யா­வி­லேயே தொடர மத்­திய அரசு நட­வ­டிக்கை எடுக்­க­வேண்­டும் என வலி­யு­றுத்தி வந்­த­னர்.

இது­தொ­டர்­பாக மத்­திய அர­சும் ஆலோ­சித்து வந்­தது.

இந்­நி­லை­யில், இந்தியாவுக்குத் திரும்­பிய மாண­வர்­களைத் தங்­கள் நாட்­டில் படிப்­பைத் தொட­ரும்­படி ரஷ்யா அழைத்துள்ளது.

இதற்­காக, ரஷ்யா, கிரீ­மி­யா­வில் உள்ள ரஷ்யப் பல்­க­லைக்­க­ழ­கங்­கள் மருத்­துவ மாண­வர்­கள், பேரா­சி­ரி­யர்­க­ளை­ அணு­கி­யுள்­ளன.

கூடு­தல் கட்­ட­ணம், நுழை­வுத்­தேர்வு இன்­றி தங்­கள் பல்­க­லைக்­க­ழ­கங்­களில் மாணவர்க­ளைச் சேர்த்­துக்­கொள்­வ­தா­க­ ரஷ்யப் பல்­கலைக்­க­ழ­கங்­கள் அறி­வித்­துள்­ளன.

இதற்கிடையே, உக்ரேனில் இருந்து மால்­டோவாவுக்குச் சென்று, அங்­குள்ள அரசு மருத்­துவப் பல்­கலைக்­க­ழ­கத்தில் சேர்ந்து இது­வரை 140 மாண­வர்­கள் கல்வியைத் தொடர்வதாக பேரா­சி­ரி­யர்­கள் சிலர் தெரி­வித்துள்­ள­னர்.