ஸ்ரீநகர் அரசியலமைப்புச் சட்டத்தின் 370வது பிரிவு நீக்கப்பட்ட பின்னர் ஜம்மு, காஷ்மீரில் வெளிமாநிலங்களைச் சேர்ந்த 34 பேர் சொத்துகள் வாங்கியுள்ளதாக மத்திய உள்துறை இணையமைச்சர் நித்யானந்த் ராய் தெரிவித்துள்ளார்.
ஜம்மு, காஷ்மீர் யூனியன்பிரதேச நிர்வாகம் இத்தகவலை வெளியிட்டுள்ளது என்றும், ஜம்மு, ரியாசி, உதம்பூர், கந்தர்பால் மாவட்டங்களில் வெளி மாநிலத்தவர்கள் சொத்துகள் வாங்கி உள்ளதாகவும் அவர் மக்களவையில் எழுப்பப்பட்ட ஒரு கேள்விக்கு எழுத்து மூலம் தாக்கல் செய்த பதிலில் குறிப்பிட்டுள்ளார்.
காஷ்மீருக்கு அளிக்கப்பட்டு வந்த சிறப்புத் தகுதி கடந்த 2019ஆம் ஆண்டு நீக்கப்பட்டதை அடுத்து, அம்மாநிலம் ஜம்மு-காஷ்மீர், லடாக் என இரண்டு யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்பட்டன. பின்னர் அங்கு நிலக் கொள்முதல் சட்டங்கள் அமல்படுத்தப்பட்டுள்ளன. அதன்படி வெளிமாநிலத்தைச் சேர்ந்தவர்களும் அங்கு சொத்துகளை வாங்க முடியும்.

