செய்திக்கொத்து

செய்திக்கொத்து

2 mins read
fed904b8-8457-4fd0-ba6d-86bfacf3b580
-

தேர்வை புறக்கணித்த மாணவிகள்

பெங்­க­ளூரு: ஹிஜாப் விவ­கா­ரம் கார­ண­மாக கர்­நா­ட­கா­வில் சுமார் 21,000 மாண­வி­கள் பத்­தாம் வகுப்பு பொதுத்­தேர்வை எழு­த­வில்லை எனத் தெரி­ய­வந்­துள்­ளது. கர்­நா­ட­கா­வில் மார்ச் 28ஆம் தேதி பத்­தாம் வகுப்பு தேர்வு தொடங்­கி­யது. தேர்வு எழுத ஹிஜாப் அணிந்து வந்த மாண­வி­கள் ஆசி­ரி­யர்­க­ளால் தடுத்து நிறுத்­தப்­பட்­ட­னர். ஹிஜாப்பை கழற்­றி­னால் மட்­டுமே தேர்வு எழுத முடியும் என்று கூறப்பட்டதால், பல மாண­வி­கள் தேர்­வைப் புறக்­க­ணித்து வீடு திரும்­பி­னர். கர்­நா­ட­கா­வில் இந்த ஆண்டு 869,399 மாண­வர்­கள் தேர்வு எழுத அடை­யாள அட்டை வழங்­கப்­பட்டு இருந்­தது.

திருச்சூர் கோவிலுக்கு தங்க யானை

திருவனந்தபுரம்: கேரளாவில் உள்ள திருச்சூர் கோவிலுக்கு பக்தர் ஒருவர் ரூ.1 கோடியும் தங்கத்தால் செய்யப்பட்ட யானை சிலையையும் காணிக்கையாக வழங்கி உள்ளார். எனினும் அவர் தமது பெயர் விவரங்களை வெளியிடவில்லை. அந்த தங்க யானை 800 கிராம் தங்கத்தைக் கொண்டு செதுக்கப் பட்டுள்ளது.

விமானக் கட்டணம் அதிகரிப்பு

புதுடெல்லி: விமானக் கட்டணங்கள் திடீரென அதிகரித்துள்ள தாக புகார்கள் எழுந்துள்ள நிலையில், இதுகுறித்து கண் காணித்து வருவதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. குறிப் பிட்ட சில வழித்தடங்களில் எவ்வளவு கட்டணம் விதிக்கப்படு கிறது என்பதை விமானப் போக்குவரத்து இயக்குநரகம் கண்காணிப்பதாகவும் இதன் மூலம் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுவது தடுக்கப்படும் என்றும் அரசு கூறியுள்ளது.

பெட்ரோல் விலை: அமைச்சர் விளக்கம்

புதுடெல்லி: கச்சா எண்ணெய் விநியோகத்தில் தடங்கல், உக்ரேன் போர் காரணமாக உலகச் சந்தையில் கச்சா எண் ணெய் விலை கடந்த இரு வாரங்களாக உயர்ந்துள்ளது என்றும் அதன் காரணமாக கடந்த 8 நாள்களாக பெட்ரோல், விலை அதிகரித்துள்ளது என்றும் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார்.