தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

'பிரதமர் மோடியைக் கொல்ல 20 கிலோ வெடிமருந்து'

1 mins read
5fc6f855-cdb1-4234-a557-1bfc2a0ea2ea
-

மும்பை: பிர­த­மர் நரேந்­திர மோடி­யைக் கொல்ல சதித்­திட்­டம் தயா­ரா­கி­விட்­ட­தாக இந்­தி­யப் புல­னாய்வு அமைப்பிற்கு (என்­ஐஏ) மிரட்­டல் மின்­னஞ்­சல் வந்­துள்­ள­தால் பாது­காப்பு அமைப்­பு­கள் விழிப்படைந்து உள்­ளன.

அந்­தச் சதித்­திட்­டம் அம்­ப­ல­மா­கி­வி­டக்­கூ­டாது என்­ப­தால் தன்­ உ­யிரை மாய்த்­துக்­கொள்­ளப் போவ­தா­க­வும் அந்த மின்­னஞ்­சலை அனுப்­பி­ய­வன் குறிப்­பிட்­டுள்­ள­தாக 'இந்­தியா டிவி' செய்தி தெரி­வித்­தது.

பிர­த­ம­ரைக் கொல்­வ­தற்­காக குறைந்­தது 20 'ஸ்லீப்­பர் செல்­கள்' முடுக்­கி­வி­டப்­பட்­டுள்­ள­தா­க­வும் அவர்­க­ளி­டம் 20 கிலோ 'ஆடி­எக்ஸ்' வெடி­ம­ருந்து இருப்­ப­தா­க­வும் அவன் கூறி­யுள்­ளான்.

சதித்­திட்­டம் தீட்­டப்­பட்­டு­விட்­ட­தா­க­வும் சரி­யான நேரத்­திற்­கா­கக் காத்­தி­ருப்­ப­தா­க­வும் பல்­வேறு பயங்­க­ர­வா­தக் குழுக்­க­ளுக்­கும் அதில் தொடர்­பி­ருப்­ப­தா­க­வும் அவன் தனது மின்­னஞ்­ச­லில் குறிப்­பிட்­டுள்­ளான்.

இம்­மின்­னஞ்­ச­லைப் பெற்ற 'என்­ஐஏ'வின் மும்­பைப் பிரிவு, அதனை மற்ற அமைப்­பு­க­ளு­டன் பகிர்ந்­து­கொண்­ட­தா­கவும் கூறி­யது. இத­னைத் தொடர்ந்து, எங்­கி­ருந்து அந்த மின்­னஞ்­சல் அனுப்­பப்­பட்­டது என்­ப­தைக் கண்­ட­றி­யும் பணியை இணை­யப் பாது­காப்பு அமைப்பு தீவி­ரப்­ப­டுத்­தி­யுள்­ளது.