ஆற்றில் மூழ்கிய புதுமணத் தம்பதி; மணமகன் பலி

ஆற்றில் மூழ்கிய புதுமணத் தம்பதி; மணமகன் பலி

1 mins read
d2203226-b3eb-4fd5-9f06-dc65dcf5ab38
ரஜின்லால். படம்: ஒன்மனோரமா இணையம் -

கோழிக்­கோடு: கேரள மாநி­லத்­தில் புது­ம­ணத் தம்­ப­தி­யி­னர் புகைப்­ப­டம் எடுத்­துக் கொண்­டி­ருந்­த­போது ஆற்­றில் தவறி விழுந்­த­னர். இதில் மண­ம­கன் சம்­பவ இடத்­திே­லயே உயி­ரி­ழந்­தார்.

திரு­ம­ணத்­திற்­குப் பிறகு கோழிக்­கோட்­டில் உள்ள குட்­டி­யாடி ஆற்­றோ­ர­மாக தம்­ப­தி­யி­னர் தங்­களை வித­வி­த­மா­கப் படம் பிடித்­துக் கொண்­டி­ருந்­த­னர்.

ஒரு கட்­டத்­தில் பாறை மீது ஏறி நின்று கொண்­டி­ருந்த அவர்­கள் தவறி ஆற்­றில் விழுந்­த­னர். மண மகன் ஆற்­றில் மூழ்கி உயி­ரி­ழந்த நிலை­யில் மண­ம­களை உள்­ளூர்­கா­ரர்­கள் சிலர் உயி­ரோடு மீட்­ட­னர். காயம் அடைந்த மண­ம­கள் மல­பார் மருத்­து­வக் கல்­லூரி மருத்­துவ மனை­யில் சேர்க்­கப்­பட்­டார்.

உயி­ரி­ழந்த மாப்­பிள்ளை ரஜின் லால் என அடை­யா­ளம் காணப்­பட்­டுள்­ளது. அவ­ருக்கு வயது 28. கடந்த மார்ச் மாதம் 14ஆம் தேதி திரு­ம­ணம் செய்து கொண்­டார்.

இந்த நிலை­யில் திரு­ம­ணத்­திற்­குப் பிறகு தங்­களை வித­வி­த­மாக புகைப்­ப­டம் எடுத்­துக்­கொள்ள விரும்­பி­ய­தால் சில குடும்ப உறுப் பினர்­க­ளு­டன் தம்­ப­தி­யர் குட்­டி­யாடி ஆற்­றுக்கு வந்­துள்­ள­னர்.

ஆபத்து நிறைந்த பகு­தி­யில் படம் பிடித்­துக் கொண்­டி­ருந்­த­போது கால் இடறி இரு­வ­ரும் ஆற்­றில் விழுந்­த­னர்.

விபத்து குறித்து போலி­சார் விசா­ரித்து வரு­கின்­ற­னர்.